3

3.2K 119 12
                                    

தோழா

___________________________________________

2010

மஹிமா முதன்முதலாக அந்த ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் காலடி எடுத்து வைத்தாள். ஐந்தாம் வகுப்பு வரையில் வீட்டின் அருகில் இருந்த ICSC ஆரம்பப் பள்ளியில் படித்தது போதுமென, ஆறாம் வகுப்பிற்காக அவள் தந்தை தேர்ந்தெடுத்த பள்ளி அது. இங்கே படிப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய மருத்துவராகவும் பொறியாளராகவும் விளங்குவதாக நாளிதழ்கள் பிரகடனப்படுத்த, தன் மகளையும் வருங்காலத்தில் நாளிதழில் பார்க்க வேண்டுமென விரும்பினார் ராஜகோபால்.

"Welcome to St.Xaviers"என்று ஒரு பெரிய அறிவிப்புப் பலகை அவளை வரவேற்றது. அப்பாவுக்கு வேலை இருந்ததால் பங்கஜம் அம்மாள் தான் அவளைப் பள்ளி செல்ல அழைத்து வந்தார். அவரும் அந்த அறிவிப்புப் பலகை அருகில் அவளை விட்டுவிட்டு "நல்லாப் படி பாப்பா" என்று கூறிச் சென்றுவிட்டார். எல்லாப் பெற்றோர்களும் வாசலருகே தங்கள் பிள்ளைகளைக் கட்டியணைத்து வாழ்த்துக் கூறி, கைப்பிடித்து வகுப்பறையில் வந்து விட்டுச் செல்ல, மஹிமா மட்டும் தன்னந்தனியாக நின்றாள்.

எங்கே செல்வதென்று தெரியாமல் தவித்த அவளை ஆதரவாய்த் தொட்டது ஒரு அழகிய கை.

"Hi! Which class are you in?"

மஹிமா திரும்பிப் பார்த்தாள். அங்கே புத்தகப்பை முதுகிலும் சாப்பாட்டுப்பை கையிலும் வைத்துக் கொண்டு ஒரு சிறுவன். தன் வயதிற்கு சற்றே உயரமாக, அலைபாயும் கேசத்துடன், சிரிப்போடு நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களில் தெரிந்த கனிவு மஹிமாவின் மனதை இலேசாக்கியது.

"6 A" என்றுமட்டும் கூறினாள் அவள்.

"அட, நானும் அதே க்ளாஸ் தான்" உரிமையுடன் அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான் அச்சிறுவன்.

"க்ளாஸ்க்கு எப்படிப் போகணும்?" தயங்கித் தயங்கிக் கேட்டாள் அவள்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now