11

2.2K 98 4
                                    

நகரும் நதிகள்

காதல் வினோதமானது.

நாம் அதை எப்படி எதிர்பார்த்தாலும் அது வேறொரு வகையில் வந்து நம்மை வியக்க வைக்கின்றதே...

மஹிமா கனவா கண்டிருப்பாள்... தன் சிறுவயது நண்பனாக வந்து தன்னிடம் காதல் சொல்வான் என்று!?
விஷ்வா நினைத்துக் கூடப் பார்த்ததில்லை... மஹிமா அவ்வளவு விரைவாகத் தன் காதலைப் பிரதிபலிப்பாள் என்று!
ஜோஷி... ஐயோ அவன்தான் கற்பனை செய்திருப்பானா? தன் நண்பர்கள் இரண்டு பேர் இப்போது காதலர்களாய் மாறுவார்கள் என்று!?

மஹிமா எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் அவளளவிற்குத் தெளிவாகவே யோசித்திருந்தாள். விஷ்வாவைப் பிடிக்காமல் யாராவது இருப்பார்களா? அவன் தன்மீதில் வைத்திருக்கும் அன்பு உண்மைதான். அது வெறும் பருவக் கவர்ச்சி இல்லை. தனக்கும் விஷ்வாவிடம் தோன்றியது ஈர்ப்பு அல்ல. அது காதல் தான்.

ஆனால்.. காதலென்றால்...?
எப்படிப் பேசவேண்டும்? என்னென்ன பேசவேண்டும்? இன்னும் அவன் எனக்கு நண்பன்தானா... இல்லை அப்படி இல்லையா?

குழப்பங்கள் பெருகின. அதைத்தான் மஹிமா அவனிடம் சொன்னாள்.

"வித்தியாசமா இருக்கு விஷ்வா"

அவன் அதைக்கேட்டுக் கல்லாக அமர்ந்திருந்தான். கண்டு அவள் கவலைகொண்டாள்.

"விஷ்வா..."

"மஹி... நான் உன்ன இந்த relationshipல force பண்ண விரும்பல. நீ வித்தியாசமா நடந்துக்க வேணாம். நான் எப்பவும் உனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான். நாம லவ் பண்றோம்னு நீ எங்கிட்ட வித்தியாசமா நடந்துக்க வேணாம்.. love is friendship. "

"நான் கேட்கணும்னு நெனைச்சத நீ சொல்லிட்ட.. thanks விஷ்வா."

நிம்மதியோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அவள்.

கல்லாக இறுகிய முகம் இளகியது. அவள்தான் எத்தனை வெகுளி! விஷ்வா என்னவெல்லாம் நினைத்து வருந்தினான் நேற்றிரவு...

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now