41

1.6K 81 1
                                    

தூரம்

வாட்டர்லூ வெஸ்ட் என்னும் காலனியில் ஜஃபீனாவின் வீட்டுக்கு வந்தவள், எதேச்சையாக சாலையின் மறுபுறம் இருந்த பூக்கடையைப் பார்த்தாள்.

அங்கே இருந்ததோ விஷ்வா.

விஷ்வாவை அங்கு கண்டதும் மஹிமா அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவனோ எங்கும் பாராமல் எதிரில் நின்ற பெண்ணோடு ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டே பூக்களை ஒரு பூங்கொத்தாக அடுக்கிக்கொண்டிருந்தான்.

நண்பர்கள் இழுக்கவும் மஹிமா தன்னிலை திரும்பி, எதுவும் காட்டிக்கொள்ளாமல் நகர்ந்தாள். ஒவ்வொருவராக விடைபெற்று அவளைப் பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் சென்றனர்.

வீடு செல்லும்வரை அவளது மனம் அலைந்து கொண்டிருந்தது. வழக்கத்தை விடச் சற்று முன்னதாகவே வீடு வந்திருந்தாள் அவள்.

அவள் நினைத்ததுபோல் வீட்டில் யாருமில்லை. மனது வலித்தது.

சரியாக ஒரு மணி ஆனதும், விஷ்வா வீட்டுக்குள் வந்தான்.

"Hi.. தூங்கிட்டு இருந்தேன். அதான் ஃபோன் எடுக்கல. அப்றம் இப்பதான் உன் மெசேஜ் பார்த்தேன். நீ சாப்பிட்டு வந்துட்டல்ல, அதான், எனக்கு லஞ்ச் வாங்க வெளிய போயிருந்தேன்"

எப்படி விஷ்வா உன்னால் இவ்வளவு சரளமாக பொய் சொல்ல முடிகிறது?

"ஓ.." என்றாள் அவள், சுரத்தின்றி.

"உன் ஃப்ரெண்ட்டோட வீட்டு சாப்பாடு எப்டி இருந்தது? ரொம்ப நாள் கழிச்சு வீட்டு சாப்பாடு... செம்மையா இருந்திருக்குமே?"

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள் அவள்.
"விஷ்வா.. என் ஃப்ரெண்ட் வீடு வாட்டர்லூ வெஸ்ட்ல இருக்கு"

அவன் சற்றே திடுக்கிட்டாலும் , உடனே சுதாரித்துக் கொண்டான்.

"ஓ.. அது ரொம்ப எலைட் கம்யூனிட்டி ஏரியா இல்ல? வீடெல்லாம் அழகா இருக்கும்"

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now