5

2.4K 114 3
                                    

அன்பு - வம்பு

அன்று ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து நால்வரும் பள்ளிக்கு வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.

வேணியும் ஜோஷியும் ஒரே குடியிருப்புப் பகுதியில் வசித்தனர். இருவரும் அவர்கள் ஏற வேண்டிய பேருந்து முதலில் வந்ததால் ஏதும் பேச நேரமின்றி, கைகாட்டிவிட்டு ஏறிக் கொண்டனர். காலையில் தான் கேட்டபோது விஷ்வா பதில் சொல்லாமல் இருந்தது மஹிமாவை என்னவோ செய்தது.

சில நிமிடங்கள் மவுனத்தில் கழிய, அவர்கள் ஏறவேண்டிய பேருந்து வந்தவுடன் விஷ்வா ஏறிச்சென்று இடம் பிடித்தான். காலையில் பள்ளிப் பேருந்தில் வந்தாலும், மாலை எப்போது வகுப்பு முடியுமென்று தெரியாததால் அரசுப் பேருந்துகளில் தான் அதிக நேரம் செல்வர்.

மஹியின் தந்தையும் அவள் அதுபோல் பொது போக்குவரத்து வசதிகளை உபயோகிப்பதை ஊக்குவித்தார். அப்போது தான் நாட்டுநடப்பு பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் சொல்வார். மஹிமாவிற்கும் நண்பர்களுடன் கூடுதலாகச் செலவிடும் நேரம் பிடித்திருந்தது.

வானம் மெல்லச் சிவந்து பின் இருட்டத் தொடங்கியது. விஷ்வா ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மஹிமா வெளியே பார்ப்பது போல அவன் முகத்தைப் பார்த்தாள். சலனமற்றதாய் இருந்தது அவன் முகம். கண்களில் தெருவிளக்கு வெளிச்சம் பட்டுப்பட்டு ஏதோபோல ஜாலம் காட்டியது.

தாங்காமல் கேட்டுவிட்டாள் அவள்.

"ஏன் விஷ்வா?"

"ஹ்ம்ம்...என்ன?"

"ஏன்? எனக்கு பதில் சொல்லு!"

"என்னது மஹி?"

"எப்படி உன்னோட காதல் கவிதை எல்லாம் அவ்ளோ யதார்த்தமா, உண்மையா இருக்கு? நீயா feel பண்ணி எழுதுவியா? யாரையாச்சும் லவ் பண்றயா என்ன? யாரு, நம்ம ஸ்கூலா? ஜோஷிக்குத் தெரியுமா? எங்ககிட்ட ஏன் சொல்லல?"

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now