"ம்.. வாங்கியாச்சு. இன்னிக்கு ஃபுல்லா ஃப்ரீ தான். எங்கயாச்சும் வெளிய ஊர் சுத்தப் போலாமா?"
"காலேஜ்ல இருந்த மாதிரியா?" எனக் கேட்டுச் சிரித்தான் அவன்.
விஷ்வாவின் யோசனை பேரில் இருவரும் Madam Tussauds museum என்னும் மெழுகுச் சிலைக் காட்சியகத்துக்குச் சென்றனர். நேரம் போவது தெரியாமல் இருவரும் அங்கே உயிருள்ள மனிதர்கள் போலவே இருந்த மெழுகுச் சிலைகளைப் பார்த்து வியந்தனர்.
ஆபிரகாம் லிங்கன் முதல் நம்மூர் தீபிகா படுகோன் வரையில் அனைத்துப் பிரபலங்களில் சிலைகளும் அங்கே இருந்தன.அவளுக்குப் பிடித்த சிலைகளுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாள் மஹி. விஷ்வாவும் ஓரிரு சிலைகளைத் தனியாக புகைப்படம் எடுத்தான். இருவருமாக நின்று நிறையவே புகைப்படங்கள் எடுத்தனர். மதியம் மூன்று மணிக்கு இருவரும் வெளியே வர, அப்போது தான் இருவருக்கும் மதிய நேரமானது தெரிந்தது.
அப்போது வரை தெரியாத பசி இப்போது வயிற்றைக் கிள்ள, இருவரும் சாலையின் எதிரிலிருந்த ஒரு இத்தாலியன் உணவகத்திற்குச் சென்றனர். பாஸ்தா, லசான்யா என தாராளமாக ஆர்டர் செய்தாள் மஹிமா.
ஆசைதீர சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்கள் கண்ணில் பட்டது H&M. சென்னையில் பார்த்திருந்தாலும், அதன் தாயகத்தில் அந்த உயர்தர ஆடையகத்தைக் கண்டதும் உள்ளே செல்ல விரும்பினர் இருவரும். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும் அவர்களுக்கு எண்ணம் புரிந்தது. உள்ளே சென்று வியப்போடு அங்கிருந்த ஆடை அணிவகுப்பை ரசித்தனர் இருவரும்.
வெளியே வரும்போது மஹிமா கையில் எட்டு பைகள், விஷ்வாவிடம் மூன்று. மணி ஐந்துக்கும் மேலாகியிருந்து. நகராட்சி அலுவலகம் சென்று விஷ்வாவுக்கு travel card ஒன்று வாங்கிக்கொண்டு, அவனது விசா எக்ஸ்டென்ஷனுக்கு விண்ணப்பித்து விட்டு, இருவரும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து Muswell hill செல்லும் பேருந்தில் ஏறினர். தங்களது நிறுத்தம் வந்ததும் பைகளை எடுத்துக்கொண்டு இறங்கி நடக்கத் தொடங்கினர்.
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.