அவளது பைகளை காரிலிருந்து இறக்கி வைத்தவாறே அவன் பேசினான்.

பின் அவளை உள்ளே அழைத்துச் சென்று, அந்த வீட்டில் நடுவில் இருந்த போர்ஷனைத் திறந்து அவளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினான். அழகாக, ரம்மியமாக இருந்தது வீடு. ஐந்து அறைகள் கொண்டு, அவளது தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

வீடு முழுக்க ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது. கிட்ச்சனில் சின்னச் சின்ன தொட்டிகளில் செடிகள் வைத்திருந்தனர். ஜன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சம், அந்தச் செடிகளில் தங்க முலாம் பூசியது. வரவேற்பறையில் கூட இடுப்புயரத்தில் பூந்தொட்டிகள் இருந்தன. வீட்டில் பின்னால் பால்கனியிலும் க்ரோட்டன்ஸ் குடும்பமாக இருந்தன.

அவள் மெய்மறந்து வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தாள். இதழ்களில் தானாக புன்னகை அரும்பியது. அவளது சிந்தனைகளைக் கலைக்குமாறு, "ஏன்ட்டி மேடம்.. வீட்டு எப்படி? நச்சிந்தா(பிடிச்சிருக்கா)?" என்றவாறு வந்தான் நேரி.

"ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நேரி! எனக்கு இந்த வீடே பிடிச்சிருக்கு. நான் இங்கயே இருந்துக்கறேன். ரெண்டல் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்றீங்களா?"

"பண்ணிடலாம் மேடம். அரை மணி நேரத்துல வர்றேன். இங்கயே வெய்ட் பண்ணுங்க."

சொன்னதுபோல அரைமணி நேரத்தில் வாடகை ஒப்பந்தப் பத்திரங்களுடன் வந்தான் அவன். உடன் வீட்டின் உரிமையாளரான இந்திய வம்சாவளி ஆங்கிலேயர்.

சான்றிதழ்களை எல்லாம் சரிபார்த்து, வீட்டைப் பற்றிய அறிவரைகளும் சொல்லி, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கிளம்பினார் ஓனர்.

நேரி போகாமல் நின்றான்.

"மேடம் டைம் ஆகுத்துந்தே... மீக்கு லஞ்ச்?"

ப்போதுதான் அவளுக்குமே பசி தெரிந்தது.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now