இதெல்லாம் தான் காதலா? சிறுசிறு விஷயங்களில் அன்பை வெளிப்படுத்துவது தானா காதல்? நாம் என்னவோ கண்ணைப் பார்த்துக் காதல் வருமென்று நினைத்திருந்தோமே....

"அதுமட்டுமே காதல் இல்ல...ஆனா அதுவும் காதலில் ஒரு பார்ட்"
மீண்டும் விஷ்வாவின் வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது.

அவன் கவிதைகள் எல்லாம் தனக்காகத் தானா... மஹியின் மனது சட்டெனத் துள்ளிக் குதித்தது. விஷ்வாவின் காதல் கவிதைகளின் கண்ணூற்று அவள்தானா?அந்த ஒரு எண்ணம் போதுமே தன் முடிவுகளை அவள் எடுக்க!

அவன் வாழ்க்கையில் இருப்பதற்கும் முன்னதாகவே, அவன் வார்த்தைகளில் நீ இருக்கிறாய் மஹிமா!

என்னென்னவோ எண்ணங்கள்... ஏழு வண்ணங்களாகக் கனவுகள்...

தானாகச் சிரித்துக் கொண்டாள் அவள். தனக்குள்ளும் இத்துணை சந்தோஷங்கள் பொங்குமென அன்றுதான் உணர முடிந்தது அவளால்.

எப்போடா விடியும் என்று காத்திருந்து தவித்தாள் மஹிமா.

---------------

மறுநாள் காலை...

கல்லூரிப் பூங்காவில் குல்மொஹர் பூக்கள் மரமெங்கும் அடர்ந்து பூத்திருந்தன. வானம் மேகங்களற்று நீலமாய் நீண்டது.

மஹிமா வழக்கமாக இவை எவற்றையும் கவனித்ததில்லை. ஆனால் இன்று ஏனோ அனைத்தும் புதிதாகக் தோன்றின. அவள் நடந்து செல்கையில் அவள் நட்புவட்டம் பூங்கா பெஞ்ச்களை ஆக்கிரமித்து அமர்ந்திருந்தது. எதிரெதிராகப் போடப்பட்டிருந்த பெஞ்ச்சுகள் அவர்கள் கதைபேச வாகாக இருந்தன.

"என்னடா சொல்ற விஷ்வா?"

"நீ மஹிமாவை லவ் பண்றயா?"

"அதனாலதான் கார்த்திக்க அடிச்சயா?"

"மஹிமா கிட்ட சொல்லிட்டயா?"

"அவ என்ன சொன்னா?"

"ஏன் ஒன்னும் சொல்லல?"

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now