"ஹ்ம்ம்... எப்டி போச்சு இன்னிக்கு ஸ்கூல்?"
"ம்ம்.. நல்லா போச்சு பா"
குரலிலிருந்த தொய்வு கவனிக்கப்பட்டது."ஏன்டா...எதும் பிரச்சனையா?"
"சேச்ச.... சரி, நீங்க எப்டி இருக்கீங்க, எப்போ வருவீங்க?"
பேச்சை மாற்ற முயன்றாள் அவள்."இன்னும் நாலு நாள்மா... அப்பா வந்துர்றேன். சரி, வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வர்றது?"
"ஹாஹாஹா.. நம்ம ஊர்ல கிடைக்காததா எதாவது இருந்தா வாங்கிட்டு வாங்க!"
"அப்ப நான் இண்டியா கேட்டைத் தான் வாங்கிட்டு வரணும்!"
"எனக்கு ஓகே!"
"ஹாஹா!! இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. அப்பா போகணும்டா. அப்பறமா பேசலாம். பத்திரமா இரு மஹிம்மா.. நான் சீக்கரம் வந்துடறேன்!"
"சரிப்பா...take care!"
"ஓகே ம்மா.. பைய்.."
"பைய் பா"
ஒரு பெருமூச்சு அவளையும் அறியாமல் எழுந்தது. அலைபேசி அணைந்ததை 'கிர்ர்ர்' என்ற மின்னொலி காட்ட, அதை பங்கஜம் அம்மாளிடம் தந்துவிட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள். இம்முறை மனதில் அப்பாவின் நினைவுகள்.அமைதியாக உணவருந்திவிட்டு, தன் அறைக்குச் சென்றாள் மஹி. அவளது அமைதி பங்கஜம் அம்மாளைத் துணுக்குறச் செய்தது.
எப்போதும் கலகலப்பாக இருப்பாளே... என்ன ஆச்சு இவளுக்கு?
-------------------
மறுநாள்
வழக்கம்போல் வாழ்க்கை நகரத் தொடங்கியது. விஷ்வா அவளிடம் ஏதும் கேட்கவில்லை. வகுப்புகள், அரட்டைகள், வீட்டுப்பாடங்கள் என இயல்பாகவே எல்லாம் நடந்தது.
மதிய உணவு இடைவேளை. ஜோஷி சொன்ன ஏதோ ஒரு நகைச்சுவைக்கு மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு "காதல், கல்யாணம்" என்று திரும்பியது.
![](https://img.wattpad.com/cover/206775439-288-k876917.jpg)
CZYTASZ
மெய்மறந்து நின்றேனே
Romansபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.