52.அத்தியாயம்

Start from the beginning
                                    

வந்துட்டான் வியாக்கியானம் பேச! முன்ன சொன்னியே... அவள யாருக்காவது பிடிக்காம போகுமானு! அவள எத்தன நாள் உனக்கு தெரியும் மிஞ்சிப்போனா ஒருமாதம் அவளோட பழகிருப்ப.

அவ பிறந்த குழந்தையா இருந்தப்பவே எனக்கு உயிர் மாதிரி, அவ என்னோட நிழல் மாதிரி!

காதல்னா உப்பு, சப்புனு பேசுற நீயெல்லாம், காதல தாண்டிய எங்களோட உறவ பத்தி பேச உரிமையில்ல... வந்துட்டான் பெரிய இவனாட்டம்!

போதும்டா! அவ பட்ட கஷ்டமெல்லாம் போதும்... குடும்பம், கட்டுப்பாடு, எங்கப்பாவோட வக்கிர எண்ணம், பழிவாங்க உன்கூட நடந்த கட்டாய கல்யாணம்...

இதுல இருந்து இப்போ தான் அவ கொஞ்ச கொஞ்சமா வெளியில வரா... அவ இஷ்டப்படி இனியாவது வாழட்டும். நீ, நான், இந்த சமுதாயம் எல்லாருமே ஏதோ ஒருவகையில அவ கண்ணீருக்கு காரணம் ஆகிட்டோம். அவ அழுத வரை போதும்! அவள விட்ரு... என் காதல் எப்பவும் அவளுக்கானது தான், முதல் காதல் ஆச்சே, அவ்ளோ சீக்கிரம் மறக்காது", அன்பன் கூறியது சிம்புத்தேவன் பற்றியா இல்லை தனது மனத்தாங்கலா, ஆதங்கமா, அவன் மூடிவைத்த உணர்வுகளா, என்பது அவனுக்கே வெளிச்சம்!

இப்போது சிம்புத்தேவன் தோளை அழுத்தமாக பற்றி தூரத்தள்ளிய அன்பன், கார் கதவை திறக்க, அங்க கண்ட காட்சியில் அவனது கண்கள் அதிர்வில் கலங்கிவிட்டது.

அமுதன் ஒரு பக்கம் கையிலிருந்த சிப்ஸை கொறித்து தள்ள, டிரைவர் சீட்டிலிருந்த சிவா அமுதனிடமிருந்து சில சிப்சுகளை அள்ளிக்கொள்ள, ஒளிர்மதி அமுதனருகே கண்ணீரோடு மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.

ஆக! எல்லாமே திட்டம்... இது புரியவும் அன்பன் கோபமாக, "என்னடா இது?", என அமுதனிடம் சீறினான்.

"அதுவா!", என ஆரம்பித்தவன், அமுதன் கூறவருவது பின் வருமாறு.
அமுதன் பார்வையில்...

ந்த ஒன்றரை வருடத்தில் அனைவரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் நிகழ்ந்தாலும், அன்பனுக்கு மட்டுமே எதுவுமே அமையவில்லை.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now