"பார்ரா நேத்து தானே உண்ண நடந்து பழக சொன்னேன் அதுக்குள்ள ரன்னிங் ரேசா" என அவன் கிண்டல் செய்யும் விதமாக கேட்க அவளுக்கோ உண்மையாகவே ஏதாவது சுவற்றில் முட்டி கொண்டால் என்ன என்ற முகத்தோடு அவனை பார்த்து ஒரு சங்கடம் கலந்த சிரிப்புடன் அவனிடம் பல்லை காட்டியவாறு,
“இல்ல...அ...அது... E...emergency” என அவளோ திணற அவனோ இதழின் ஒரு ஓரத்தில் நமட்டு சிரிப்புடன்…
“என்ன... எது.. எது.. emergency.. ஹா..? உன் brother மண்டைய யாராவது ஒடச்சிடங்களா?” என அவன் சொன்னவுடன் அவள் அதிர்ச்சியில் உறைந்திருக்க அவனோ பின்னால் திரும்பி அவன் நண்பரகளிடம்,
“guys.. இது யாருன்னு தெரியுதா? நம்ம கேப்ரியளோட சிஸ்டர்” அவன் கூறியவுடன் அவன் பின்னால கூட்டத்திற்குள் முணுமுணுக்க ஆரம்பிக்க அவளுக்கோ அதிர்ச்சி அடைவதா? இல்லை கோபப் படுவதா? என்று தெரியவில்லை,
‘அட பாவி நேத்து தானே ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டு போனான்?’ என்று அவள் மனதிற்கும் பேசிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் பின்னால் இருந்த கும்பலின் ஒருவன்,
“டேய் அப்ப வேணாண்டா விட்டுட்ரா, அவன் சும்மாவே நல்லா செய்வான் அப்பறம் வெச்சி செஞ்சிருவான்”
இன்னொருவனோ “இல்ல மச்சான் அவன் உண்ண செஞ்சான்ல அதுக்கு நம்ம ஏதாவது பண்ணனும்”
மற்றொருகுரல் “ டேய் இந்த விளையாட்டுக்கு நாவரள நா திரும்பவும் ஹாஸ்ப்பிட்டல் போக தயாரா இல்ல” என கூட்டத்திற்கு மாறி மாறி பேச அவளுக்கோ அதிர்ச்சியுடன் பயமும் உருவாக ஆரம்பித்தது.
அவள் அங்கிருந்து நகர முயன்ற தருணத்தில் தான் இன்னும் மைகேளின் கை அவன் இடையை சுற்றி இருப்பது தெரிந்தது அவனோ அவள் போகிறாள் என்று தெரிந்தவுடன் கையை இருக்கியவாறு,
“ டேய் கொழந்தைய பயம் புருதாதீங்கடா பாவம் அழுதுட போறா, அவ நம்மள பத்தியெல்லாம் அவன் கிட்ட சொல்ல மட்டா இல்ல குட்டி?” என அவளிடம் அவன் கேட்க அவளோ இவனின் மறு பக்கத்தை பார்த்து மிரண்டு உறைந்து அசையாமல் நிற்க அவனோ…
YOU ARE READING
உயிரில் இணைந்தவனே....
Mystery / Thrillerமறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது...