Date Published: May 01 2024
Word count: 3093⚜️⚜️⚜️⚜️⚜️
மன உளைச்சலில் உறக்கம் தொலைத்திருந்தார் பரந்தாமன்.
பூங்கா காலனியின் உள்ளேயே நடைபயிற்சி மேற்கொள்ள நினைத்து கீழே இறங்கினார் அந்த வைகறைப் பொழுதில். முதல் நாள் நடுநிசி வரை கொட்டித் தீர்த்திருந்தது மழை என்பதை மறந்துபோயிருந்தார்.அதே நேரம் மூர்த்தியின் வீட்டு கதவு திறந்தது.
"பரமு என்ன பா இது இந்த நேரத்துக்கு எங்கேர்ந்து வர? என்னடா முகமே சரியில்லை?" மூர்த்தி பதட்டமானார்.
"நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லை. வாக்கிங்க் போலாம்னு இறங்கினேன் மழை பெஞ்சது நினைவில்லாம" என்றார் வறண்ட சிரிப்போடு.
"மழை பெஞ்சது மறந்திருச்சா" திடுக்கிட்டார் மூர்த்தி.
மூர்த்தியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் நடந்த அனைத்தையும் எடுத்துக் கூறியபின்.
பூரணியின் அறை கதவு திறந்திருந்தது. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தரையில் அமர்ந்த நிலையில் சுவற்றில் தலை சாய்த்து உறங்கி விட்டிருந்தான் விஷ்வா. பூரணி அவன் கையை இறுக பற்றியிருந்தாள்.
"மூணு மணிலேருந்து விஷ்வா இப்படியே தான் உட்காந்தபடியே தூங்கறான். மெல்ல எழுப்பி படுத்துக்கப்பானு சொன்னேன் வேணாம் மாமா அவ மறுபடியும் கலவரப்படுவா அது நல்லதில்லைன்னு சொல்றான்."
நீண்ட பெருமூச்செறிந்தார் பரந்தாமன். மூர்த்தி பேச்சற்று நின்றிருந்தார்.
"வாங்கண்ணே.." பக்கத்து அறையிலிருந்து வெளிப்பாட்டார் கோகிலா. அனைவரது கவனமும் அறையை நோக்கி சென்றது. "உட்காருங்க காபி எடுத்துட்டு வரேன்."
ஆண்கள் இருவரும் என்ன பேசுவது எங்கே தொடங்குவது என தெரியாமல் அமைதி காத்தனர்.
காப்பியை அவர்களிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் கோகிலா.
"அண்ணே இப்படி ஒரு குறையோட ஒரு பொண்ணை எப்படி உங்க பையனுக்கு கட்டிவைக்கிறதுன்னு யோசிக்கறீங்கன்னு புரியுது.."
STAI LEGGENDO
கை நீட்டி அழைக்கிறேன்..
Storie d'amore21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு வில...