பாகம் 44

93 3 9
                                    

Date published: 4 Feb 2024
Word count: 2334

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

'கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லைனு சொல்றது பழமொழியா இல்லை பாடல் வரியா?'

சந்தேகம் பூரணிக்குள் எழ காரணம் மார்கழியில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது மழை.

சந்தேகம் பூரணிக்குள் எழ காரணம் மார்கழியில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது மழை

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.




மொட்டைமாடிக்கு செல்லும் படிகட்டில் அமர்ந்திருந்தாள். தன்னை போல வானமும் அழுவது போல தோன்றியது பூரணிக்கு.
சொல்லொணா துயரத்தை கருமேகங்களின் ரூபத்தில் நெஞ்சில் சுமந்து, துக்கம் தாளாமல் தன்னை போல் பிழிய பிழிய அழுகிறதோ என எண்ணினாள்.
நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது!

சுயபச்சாதாபம் போல ஒரு படுகுழி எதுவுமே இருக்க முடியாது!

"ஏன் அவருக்கு உணர்ச்சியே கிடையாதா? பாக்க போனா அண்ணா தான் இன்னும் ஜாஸ்தி பாவம்.

ஒரு வார்த்தை அவரை பேச விடாம எவ்வளவு ஹர்ட் பண்ண நீ? அதுவும் எல்லார் எதிர்லயும்? அவருக்கு பணம் பெரிசுன்னு நினைச்சிருந்தா பிரகாஷ் அண்ணா குடுக்கற பணத்தை வாங்கியிருப்பாரு இல்லாட்டி அந்த பிஸினஸ் ஆஃப்ர் ஒத்துகிட்டிருப்பாரு. ஒரே செகண்டுல அண்ணனை தூக்கி எறிஞ்சு பேசிட்டியே?


என்ன கோவம் வந்தாலும் நிதானம் இழக்காம முடிவு எடுன்னு அவருக்கு உபதேசம் பண்ணிட்டு நீ என்ன செஞ்சு வச்சிருக்க இப்ப?

உனக்கு பேரு பூகுட்டியாம்
நீ பூகம்பம் டி, புல்டோசர்..."
தோழியை அடிப்பது போல கையை ஓங்கிவிட்டு, தன் நெற்றியில் அறைந்து கொண்டு
அவள் செய்த தவறை சுட்டிக்காட்டி அவளை கண்டித்து
கொண்டிருந்தாள் சுகந்தி.

கை நீட்டி அழைக்கிறேன்..Where stories live. Discover now