21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு வில...
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
Date published: 23 February 2024 Word count: 2055
ஷர்மிளா தன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நண்பர்கள் பட்டாளத்தை அழைத்து போக அவரவர் வீட்டில் அனுமதி பெற்றிருந்தாள். அர்ஜுன், சுகந்தி, விஷ்வா பூரணி நால்வரும் முன்னதாக புறப்பட பெரியவர்கள் மாலை சங்கீத் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்வதாக கூறியிருந்தனர்.
அர்ஜுன் காரை ஓட்டி கொண்டிருந்தான், பூரணியும் விஷ்வாவும் பின் இருக்கையில். விஷ்வா பேசாமல் அமைதியாய் வர, பூரணியும் கல்யாண மண்டபத்திற்கு போன பிறகு அவனிடம் பேசலாமென முடிவெடுத்து அமைதியாக இருந்தாள். வீட்டில் இருக்கையில் எத்தனை முயன்றும் அவன் பிடிகொடுத்து பேசவில்லை.
அடுத்து நடந்தது பேரிடியாய் இறங்கியது பூரணியின் தலையில். விமான நிலையத்தை கார் நெருங்குவதை பார்த்து திகைத்த பூரணி, "அர்ஜுன் அண்ணா இங்க எதுக்கு? சொல்லு ணா.. சுகு நீயாவது சொல்லுடி. என்ன நடக்குது? சிவா என்ன டா?" மயான அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.
டெர்மினல் வாயிலை அடைந்ததும் விஷ்வா காரிலிருந்து இறங்கி அவனுடைய பெட்டிகளை இறக்கினான். கார் கதவருகே வந்து நின்றவனை நம்பமுடியாமல் குழப்பத்தோடு பார்த்தாள். அவன் பார்வையை தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டான்.
"பாம்பேக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. இம்மீடியட்டா ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர். கல்யாணத்துக்கு நான் வரலைன்னு ஷம்மு கிட்ட சொல்லிட்டேன். அங்க செட்டில் ஆனப்புறம் அம்மாவை கூட்டிட்டு போவேன்".
பூரணி செய்வதறியாது இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட. அவன் அதை காண மாட்டாது நகர முற்பட, சட்டென காருக்குள்ளிருந்து எட்டி அவன் சட்டையை பற்றிக் கொண்டாள்.