Published: August 16, 2021
மெல்ல துயில் கலைய, விரல் நுனியிலும், உடலிலும் லேசான ஈரப் பதத்தை உணர்கிறேன். பனித்துளிகள்! இதமான புல்வெளியில் படுத்திருக்கும் உணர்வு மெல்ல புரிபடுகிறது, நாசியை தீண்டும் மண் வாசனையால். மயில்தோகையாய் வருடும் தென்றல் காற்றோடு மல்லிகையின் மணமும் கலந்து சுண்டியிழுத்தது. சலசலத்து ஓடும் நீரோடையின் சப்தமும், பறவைகளின் சங்கீதமும் என்னை வந்தடைய, அங்கேயே இருந்துவிட ஏங்குகின்றது நகரத்தின் இரைச்சலுக்கு பழக்கப்பட்ட பஞ்ச இந்திரியங்களும். இயற்கை தந்த இதத்தில், என்னை கேட்காமலே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டுவிடுகிறது இதழ்களில்.ஒரு சொட்டு மழைகூட கிடையாது என போக்கு காட்டிவிட்டு, நீல வானம் மொத்ததையும் துடைத்து வைத்துவிட்டு முறுக்கி கொண்டு வெளிநடப்பு செய்துவிட்டிருந்தன மேகங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலம். நீலம் மட்டுமே.
கண்மூடி, சிந்தனைகளை அதே போல துடைத்துவிட முயல்கிறேன்.'ம்க்கும்ம்..பேராசை தான்' இடித்துறைக்கிறது மனம்!
மழை முகிலாய் அல்லாமல் வானவில்லாய் வந்து என்னுள் நிறைந்து விடுகிறது ஒரே ஒரு உருவம் மட்டும். மார்கழி மாதத்தின் முன்பனி மறைக்க முயலும் ஆதவனைப் போல, குழப்பங்கள் சூழ்ந்த என் நினைவுகளினூடே ஒளிந்து மறைந்து விளையாடுகிறான். ஒவ்வொரு முறையும் இந்த கனவு வரும்போது விரைந்து ஓடி அவனை பிடித்து விட எத்தனிக்கிறேன், விரல் தீண்டும் முன் நழுவிவிடுகிறான் மாயக்காரன். கண்ணாமூச்சி ஆடுகிறான் நான்கு ஆண்டுகளாய், என் நினைவு மெல்ல திரும்ப தொடங்கியதிலிருந்து.
أنت تقرأ
கை நீட்டி அழைக்கிறேன்..
العاطفية21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு வில...