Date published: 9 April 2022
Word count: 1608🦋🦋
டைரியில் எழுதபட்டிருந்ததை படித்ததில், தான் யாரையோ விரும்பியிருக்க கூடும் என்ற அவளது முந்தைய சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்தியது.
'ஆனா ஒருவேளை அது சிவா இல்லாம வேற யாராச்சும் இருந்தா?'
பதற்றம் தொற்றிகொண்டது, நெஞ்சை அடைத்தது துக்கம், யாருக்கோ துரோகம் இழைத்துவிட்டதாய் உணர்வு.
யோசித்துகொண்டே அடுத்த பக்கத்தை புரட்ட, விஷ்வா மீதான தனது விருப்பத்தை மிக தெளிவாக வெளிப் படுத்தியிருந்தாள் ஒரு கவிதையின் மூலமாக.
🦋🦋🦋
கனவுலகில் புதிதாய் ஓர் உதயம், உன் கால்தடம்,
நினைவுப் பெட்டகத்தில் நிறைந்திருக்கும் பொக்கிஷம், உன் ஞாபகம்
நகரத்தின் பேரிரைச்சலில் ஓர் மௌனம், உன் புன்னகை
தொடும் பூந்தென்றலில் ஓர் ஸ்பரிஸம், உன் தீண்டல்
தகிக்கும் வெயிலில் குளிர்விக்கும் நிழல், உன் அன்பு
நான்கு பேர் மத்தியிலும் நாற்பது பேர் மத்தியிலும் உணர்கிறேன் உன்னை
கை தொடும் தூரத்தில் இருந்தும்
கண்ணாமூச்சி ஏனோ மாயவனே?கைநீட்டி அழைக்கிறேன்
உனக்காக காத்திருக்கிறேன் என் சிவா..🦋🦋🦋
இமைக்க மறந்து, சுவாசிக்க மறந்து சிலையாய் சமைந்திருந்தாள் அன்னப்பூரணி. சுற்றம் மறந்து, இயக்கம் மறந்து, நினைவலைகளின் ஊடே தத்தளித்திருந்தாள். தனது யூகம் சரியாக அமைந்துவிட்ட திகைப்பா, அல்லது விஷ்வாவிடம் முன்பிருந்தே காதல் வயப்பட்டிருந்தாள் என்பதால் திகைப்பா? இரண்டுமே தான்!
VOUS LISEZ
கை நீட்டி அழைக்கிறேன்..
Roman d'amour21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு வில...