பிரம்ம முகூர்த்தம் அல்லது வைகறை பொழுது - அதாவது அதிகாலை மூன்று முதல் ஐந்து மணி வரையிலான நேரம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் குல தெய்வ பிரார்த்தனையும் பரிகார பூஜையையும் முடித்து விட ஏற்பாடு. அவர்கள் வசித்த பகுதியிலேயே ஒரு திருமண மண்டபத்தின் முன்பு அர்ஜுன் சுகந்தி இருவரது குடும்பங்களும் தனி தனியே வேனில் வந்து இறங்கின. மண்டபத்தில் இரு வேறு அறைகளில் அவரவர் குலதெய்வ பூஜை செய்ய திட்டம்.
மிளகாய் பழ சிகப்பு மைசூர் பட்டு புடவையணிந்து, சிகப்பு கல் பதித்த நகைகள், மெல்லிய ஒட்டியாணம், கண்ணை உறுத்தாத ஒப்பனை என எழிலோவியமாக நின்றிருந்தாள் சுகந்தி.
பூஜை தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற, "தாய்மாமா, அத்தை, பாட்டி வீட்டுக்கு வேற பெரியவா யாராவது இருக்காளா? அவாகிட்டேயும் ஆசிர்வாதம் வாங்கிண்டு வாம்மா பூஜையை ஆரம்பிக்கலாம்".
புரோகிதர் கூறியதும் சுரேஷின் அண்ணன், அண்ணி மற்றும் பத்மாவின் அண்ணன் முன்னே வர அவர்களிடம் ஆசி பெற்றுகொண்டாள்.
"அம்மா இன்டக்ஷன் அடுப்பு எடுத்துண்டு வந்துருக்கேளா?"
"இருக்கு சாமி" பத்மா அவர் கூறியது எல்லாம் தயாராக இருப்பதை உணர்த்தினார்.
"சரி. நான் பூஜை ஏற்பாடெல்லாம் பண்றேன். உங்க பொண்ணு கையால புது பாத்திரத்துல பாயசம் வச்சு அதை குல தெய்வத்துக்கு படைக்கணும். கடைசில ஒருத்தருக்கு தானம் பண்ண ஏற்பாடாகியிருக்கு இல்லையா அவா கிட்ட இந்த பாயசத்தை பாத்திரத்தோட குடுக்கணும்."
YOU ARE READING
கை நீட்டி அழைக்கிறேன்..
Romance21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு வில...