கானல் - 23

224 20 4
                                    

பேசாமல் என் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி கொள் என்று மதன் கூறியதை கேட்டு அவனை கோபமாக முறைத்தாள் வானதி.

"எதுக்கு இப்போ இவ்வளவு கோபமா பாக்குற! நான் அங்க தனியா தான் இருக்கேன், இன்னும் சதீஷ் கூட ஊர்ல இருந்து வரல, அவ்வளவு பெரிய வீட்டுல நீ வந்து ஒரு ரெண்டு நாள் தங்குறதுல என்ன ஆயிட போகுது?" என்று அசால்ட்டாக அவன் கேட்க,

"அது எப்படி ஒரு வயசு பையன் தனியா இருக்க வீட்டுல, ஒரு பொண்ணு வந்து தங்க முடியும்?" என்றாள் கோபமாக.

"அதுல என்ன இருக்கு வானதி! நானும் உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் தானே, நீ உன் ஃப்ரெண்ட் வீட்டுல தங்குறதா நினைச்சுக்கோ!

ஒருவேளை என் வீட்டுல வந்து நீ தங்குனா, நான் உங்கிட்ட தப்பா நடந்துக்குவேனு நினைச்சு பயப் படுறியா?" என்றான், அதை கேட்ட போது அவன் குரலில் வருத்தம் மேலோங்கி இருந்தது.

"அது! நான் அப்படி நினைக்கல, ஆனா இது வேற யாருக்கும் தெரிஞ்சா, தப்பா தானே பேசுவாங்க!" என்றாள்.

"வேற யார் என்ன பேசுவாங்கனு நீ எதுக்கு கவலைப் படுற! உனக்கு தெரியாதா உன்ன பத்தி!" என்றான்.

"இல்ல மதன், எனக்கு என்னவோ இது சரியான யோசனையா தெரியல. எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க, நான் குந்தவி அக்காவுக்கு ஃபோன் பண்ணி பேசுறேன், அதுக்கு அப்புறம் நான் சொல்லுற இடத்துல என்ன டிராப் பண்ணிடுங்க" என்றாள்.

"ஓகே! உன்னுடைய முடிவு தான்" என்று கூறி அவள் குந்தவியிடம் பேசட்டும் என்று நினைத்து அமைதியாக காரில் இருந்து இறங்கி நின்றுவிட்டான்.

வானதி குந்தவியை அழைத்து விவரத்தை சொன்னாள்.

"அண்ணி, நீங்க ஒரு ஹாஸ்டல்ல தங்கி இருந்தீங்களே, இப்போ போய் கேட்டா, அங்க என்ன தங்க வச்சுப்பாங்களா?" என்றாள்.

"அங்க நீ போறது சேஃப்டி இல்ல வானு மா, நானே அங்க கொஞ்ச நாள் தான் தங்கி இருந்தேன், அங்கிருந்து வந்ததுக்கு அப்புறம் தான் அங்க நிறைய தப்பு நடக்குதுன்னு கண்டுபிடிச்சு, நிறைய பேர அரெஸ்ட் பண்ணிருக்காங்க, அதனால நீ அங்க போறது சரியா இருக்காது.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now