கண்ணில் பட்ட இடமெல்லாம் மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்கி கிடந்தன. அந்த அழகிய மலர்களை நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது வானதிக்கு.
தன் காதலனான சூரியனை பார்த்ததும் அதன் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி. மாலை வேளையில் முகத்தை சோர்வாக வைத்து கொள்ளும். அந்த தோட்டத்தின் நடுவில் அமர்ந்து அழகிய மலர்களை நாள் முழுவதும் பார்த்து கொண்டு இருந்தாலும் அவளுக்கு சளைக்காது.
அவ்வாறு அவள் அங்கு அமர்ந்திருந்த போது, அவள் சித்தி மகன்கள் அவளிடம் ஓடி வந்தார்கள்.
"என்ன டா! ரெண்டு பேரும் இவ்வளவு அவசரமா வரீங்க?" என்றாள்.
"அக்கா! பெரியம்மா உன்ன கூட்டிவர சொன்னாங்க. சீக்கிரம் வா, போகலாம்" என்று கூறி அவளை அழைத்தான் அந்த சிறுவன்.
"அம்மா எதுக்கு கூப்பிட்டாங்க" என்று எண்ணி கொண்டே அவர்களுடன் சேர்ந்து புறப்பட்டாள்.
அவள் வீட்டுக்கு சென்ற நேரம் அவள் அம்மா, சித்தி, அப்பத்தா, அத்தை என அனைத்து பெண்களும் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள்.
"என்னாச்சு?" அவள் கேட்க, "இன்னிக்கு உனக்கு ரிசல்ட் வரும்னு தெரியாதா?" என்று கேட்டு அவளை முறைத்தாள் அவளின் தாய். அப்பொழுது தான் அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.
"அய்யோ! அதை மறந்துட்டேனே" என்றாள் தலையில் கை வைத்து கொண்டு. "நான் வரதுக்கு முன்னாடியே என் ரிசல்ட்டை பாத்துட்டீங்களா?" என்றாள்.
"ம்! பார்த்தாச்சு பார்த்தாச்சு! நீ தொள்ளாயிரத்து ஐம்பது மதிப்பெண் வாங்கி இருக்க" என்றாள் அவளின் பெரிய சித்தி வசந்தி. அவள் புன்னகைத்தாள், "அந்த இங்கிலீஷ்ல எப்படியோ பாஸ் பண்ணிட்டனா! நல்ல வேளை, பெயில் ஆயுடுவேனு நினைச்சேன்" என்றாள்.
"எல்லாம் நல்ல மார்க் தான் வாங்கி இருக்க. என் தங்கம்!" என்று கூறி அவளுக்கு நெட்டி முறித்தாள்.
வீட்டில் அனைவரும் அதைப் பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெற்றி அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து அவளை பாராட்டினான்.
YOU ARE READING
கானல் நீ என் காதலே!
Romanceதுயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த...