கல்லூரி தொடங்க இரண்டு நாட்கள் இருந்த நிலையில், வினோத் பிறந்தநாளை கொண்டாடவும் அவன் ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல் அவன் நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுப்பதற்காகவும் அனைவரும் சேர்ந்து அருகில் இருந்த ஒரு இடத்திற்கு ஒருநாள் முழுவதும் சுற்றுலா போல் சென்று வரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.
எனவே கல்லூரி தொடங்கும் முன்பே வானதியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
வெகு நாட்கள் கழித்து அவள் நண்பர்களை பார்த்து அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் அனைத்தையும் புதிதாக சிறு தயக்கத்துடன் பார்த்தவள், அந்த ஒரு வருடத்தில் கல்லூரி வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சேர்ந்து செலவிட பழகி இருந்தாள்.
எனவே விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்த நாள் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக தோன்றியது.
அவள் உடைமைகளை கல்லூரி விடுதியில் வைத்து விட்டு, பின்க் நிற சுடிதார் அணிந்து மிகவும் எளிமையாக தன்னை அலங்கரித்து கொண்டு அவள் நண்பர்களுக்காக காத்திருந்தாள்.
அவள் நண்பர்களை பார்க்க போகும் ஆனந்தம் ஒருபுறம், தன்னவனை பதினைந்து நாட்கள் கழித்து சந்திக்க போகும் குதூகலம் ஒருபுறம் இருந்து அவளை மிகவும் ஆர்வமாக காத்திருக்க வைத்தது.
அரைமணி நேரத்தில் இரண்டு கார்கள் வந்து அவள் காத்திருந்த இடத்தில் நின்றன. அதில் இருந்து அவள் தோழிகள் அனைவரும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டு அவளிடம் நலம் விசாரிக்க, அவளும் மகிழ்ச்சியாக அவர்களுடன் பேசி கொண்டே, கண்களால் மதனை தேடினாள்.
அவன் தான் ஒரு காரை ஓட்டி வந்திருந்தான். எனவே உள்ளே அமர்ந்த படியே அவளின் முகத்தை பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தான். அவளும் மலர்ந்த முகத்துடனேயே கண்களால் அவனிடம் நலம் விசாரித்தாள்.
இருவரது பார்வை பரிபாலனைகளும் முடிந்த பிறகு, அங்கிருந்து அவர்கள் அனைவரும் கிளம்பி இருந்தார்கள்.
DU LIEST GERADE
கானல் நீ என் காதலே!
Romantikதுயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த...