கானல் - 1

1.6K 38 6
                                    

அங்க யாரு அவளை இப்படி தாங்குவாங்க?" என்று புலம்பிக் கொண்டே அடுப்படியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

"என்ன அண்ணி, காலையிலேயே வருத்தப் பட்டு ஏதோ பேசிட்டு இருக்கீங்க" என்று கேட்டுக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தார் பானுமதி.

"நீயே சொல்லு மா, இவுங்க செய்யுறது எல்லாம் ரொம்ப அதிகப்படியா இல்லையா? இப்படியா செல்லம் கொடுக்குறது புள்ளைக்கு" என்றார்.

"நம்ம வீட்டுல இருக்க வரைக்கும் தானே அண்ணி. அதுக்கு அப்புறம் அவளுடைய புகுந்த வீடு எப்படி இருக்கும்னு தெரியாதே! இங்க இருக்க வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும்" என்றார் மென்மையாக.

"அது தான் என் பயமே! நாளைக்கு போற வீட்டுலயும் எல்லாரும் இப்படி இருக்கணும்னு தானே இவ எதிர்பார்ப்பா! எதாவது சின்ன பிரச்சனை வந்தாலும் இவ அதை சரி செய்யாம இங்க வந்து சொன்னா அவ்வளவு தான் அப்பாவும் பையனும் எதை பற்றியும் யோசிக்காம அவுங்க கிட்ட சண்டைக்கு போயிருவாங்க! அதெல்லாம் நினைச்சு தான் நான் ரொம்ப பயப் படுறேன்.

இவ என்னவோ அதிசிய பிறவி மாதிரி நினைச்சு அவளை ராஜ்குமாரி மாதிரி வளர்த்துட்டு இருக்காங்க. இவளும் வெளி உலகம் தெரியாம, பிடிவாதமே குணமா வளர்ந்திருக்கா. இவ எதிர்காலம் பத்தி நினைச்சா பயமா இருக்கு" என்று மனதில் இருந்தவற்றை அவரிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

"கவலை படாதீங்க அண்ணி. வானதி புத்திசாலி, அவளுக்கு இருக்க நல்ல குணத்துக்கு எந்த குறையும் இல்லாம நல்ல வாழ்க்கை அமையும்" என்று கூறினார் மனதார.

மரகதம் சொல்லியது போல அந்த குடும்பத்தில் அனைவரும் அவளை அதிசயமானவளாக தான் பார்த்தார்கள். நான்கு தலைமுறைகளாக பெண் வாரிசே இல்லாத அந்த குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை அவள் தான்.

அவள் பிறந்தநாளை மொத்த குடும்பமும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

திலகவதி வேதநாயகம் தம்பதியருக்கு மூன்று மகன்கள். அதில் மூத்தவர் ராமசந்திரன். வேதநாயகம் இறைவனடி சேர்ந்த பிறகு, தாய் திலகவதியுடன் சேர்ந்து உழைத்து அவர் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர். அவர் தம்பிகளுடன் ஒரே வீட்டில் தான் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

கானல் நீ என் காதலே!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ