தீயாய் சுடும் என் நிலவு 8

3.1K 144 11
                                    

"வா தி" என்றான் ஒரு வீட்டினுள் நுழைந்து.

"யார் வீடு இது?" என்று கேட்டுக்கொண்டே வேட்டை சுற்றி முற்றி பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் மிருதி.

"ஹ்ம்ம் இது என் பிரென்ட் வீடு." என்றான் கையில் இருந்த பையை கீழே வைத்து.

"எங்க அவங்க?" மிருதி

"இதோ வந்துட்டேன்." என்று கையில் நீருடன் நின்றாள்.

"ஹாய்" என்றாள் மிருதி.

"ஹாய். நீங்க அமுதனோட பிரென்ட்னா என்னைவிட பெரியவங்களா தான் இருப்பிங்க. சோ உங்களை நான் அக்கான்னு கூப்பிடறேன்" என்று க்ளாஸை நீட்டினாள்.

"எப்படி வேணா கூப்பிடு." என்று சிரித்தாள் மிருதி.

"தி. இது ஸ்ரீஷா. இங்க தனியா தான் இருக்கா. இனி இங்கயே நீ தங்கிக்கோ." என்றான் அமுதன்.

"வேணாம் அமுதா. என்னால அவங்களுக்கு தொல்லை எதுக்கு?" என்றாள் மிருதி.

"அட நீங்க வேற அக்கா. எனக்கு இங்க தனியா இருக்க எவ்ளோ போர் அடிக்குது தெரியுமா? இப்போ நீங்க வந்துட்டீங்கன்னு நிம்மதியா இருந்தா அதுக்குள்ள இப்படி சொல்லடிங்க?" என்றாள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.

"என்னை இப்போ தான் பார்க்குற. அதுக்குள்ள ..?" என்று ஸ்ரீஷாவை பார்க்க,

"எப்போ பார்த்தா என்ன? அமுதன் கூட்டிட்டு வந்துருக்காரு. அது ஒண்ணே போதும்." என்றாள்.

"அயோ! தி. சும்மா இரு. நீ இங்க தான் இருக்க போற. இது ஸ்ரீஷாவோட சொந்தவீடு." என்றான் அமுதன்.

"அப்போ மாச மாசம் வாடகை கொடுத்திடறேன்" என்றாள் மிருதி.

"சரி. அதைபத்தி அப்புறம் பேசிக்கலாம். உனக்கு உடம்பு சரி இல்லை. நீ முதல்ல ரெஸ்ட் எடு. ஸ்ரீ பார்த்துக்க. நான் அப்புறம் வரேன்" என்று கிளம்பிவிட்டான்.

மறுநாள் மாலை ஸ்ரீஷாவிற்கு போன் செய்தான் அமுதன்.

"ஹலோ!" அமுதன்.

"ஹலோ! " ஸ்ரீ.

"என்ன பண்ற? சாப்பிட்டியா?" என்றான் அமுதன்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Donde viven las historias. Descúbrelo ahora