"சாரி. இனி உங்களை விட்டு எங்கயுமே போக மாட்டேன். நீங்க நான் நம்ம பொண்ணு சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழனும்னு எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன். அதுக்கு இப்போ தான் நேரம் வந்துருக்க போல...
ஆனால் அப்படி இனி நாம சேரவே முடியாதுன்னு வெறுத்து போய் வாழ்க்கை மேல ஒரு பயம் வந்துருச்சு.. இங்கயே இருந்தா நான் பட்ற கஷ்டத்தை பார்த்து நீங்களும் பாப்பாவும் ரொம்ப கஷ்டப்படுவீங்கன்னு தான் உங்க கண்ணுலயே படாம எங்கயாவது போன பிறகு என் உயிர் போனா பரவால்லன்னு தான் உங்க யாருக்கும் சொல்லாம போக நினைச்சேன்... ஆனாலும் உங்க அன்பால் என்னை காப்பாத்திட்டிங்க. என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.
எனக்கு தான் இப்போ உடம்பு சரியாகிடுச்சே. இனி என்னால உங்களைவிட்டு இருக்க முடியாது.. பிளீஸ் மாமா... நான் உங்களை என் உயிருக்கும் மேலா விரும்புறேன்... உன்னை விட்டா வேற யாரு என்னை புரிஞ்சுக்க முடியும்?" என்றாள் விலகாமல் கண்ணீரோடு.
எரிமலையாய் கொதித்து கொண்டிருந்த உள்ளத்தை குளிர்வித்தது அவளின் வார்த்தைகள். இதற்கு தானே அவனும் காத்திருந்தான். இதோ அந்த நாளும் வந்துவிட்டது. அவனின் மிருதியும் அவனிடம் வந்துவிட்டாள். வேறென்ன வேண்டும் இனி வாழ்க்கையில். இறுக அணைத்து மிருதியின் நெற்றியில் இதழ் பதித்தான்.
"உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டி. இனியும் என்னைவிட்டு எங்கயும் போகணும்னு கனவிலே கூட நினைக்காத" என்றான் எச்சரிக்கையாய் புன்னகைத்து.
"ஹக்கும்... எங்கயும் போக மாட்டேன்" என்றாள் மிருதி.
"உள்ள வரலாமா?" என்று குரல் கேட்க இருவரும் சட்டென்று விலகி நின்றனர்.
இருவரையும் பார்த்து புன்னகைத்து கொண்டே வந்தனர் அமுதன், ஸ்ரீ, தீரனின் அம்மா, மற்றும் திஷா.
"தீரன் என் தி யே சொல்லிட்டா... இனி நீங்க அவ இல்லாம எங்கயுமே போக கூடாதாம்..." என்று சிரித்தான்.
![](https://img.wattpad.com/cover/194430629-288-k427907.jpg)
YOU ARE READING
தீயாய் சுடும் என் நிலவு - (முழுதொகுப்பு)
General Fictionஉண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...