தீயாய் சுடும் என் நிலவு 6

3.2K 136 22
                                    

"எந்திருடி! புருஷன் வேலைக்கு போய்ட்டு வரும்போது சமைச்சு வைக்கணும்னு தெரியாதா? இப்படி பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்?" என்றான் தீரன்.

எதுவுமே அறியாமல் மிருதி உறங்கி கொண்டிருக்க இன்னும் கோபம் அதிகமாகியது.

"எத்தனை தடவை கூப்பிட்டுட்டு இருக்கேன். எதுவுமே கேகாத மாதிரி படுத்திருந்தா என்ன நினைச்சிட்டு இருக்க நீ? வீட்ல இருக்கிறதே சமைக்கிறது மட்டும் தான். அதையும் செய்ய முடியாதா உன்னால? இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?" என்றான் குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல்.

"இல்ல நான் பேசுறது கேட்டும் சும்மா படுத்திருக்கியா? எந்திருடி" என்று ஓங்கி வயிற்றில் காலால் எட்டி உதைத்தான்.

இதை எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு திடீரென்று வயிற்றினில் ஏற்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்து அலறினாள் மிருதி.

"அ..ம்..மா.." என்று வயிற்றை பிடித்து கொண்டு அலற தொடங்கினாள் மிருதி.

"வீட்ல இருக்க ஒரு வேலைய கூட செய்ய முடியலைன்னா அப்புறம் எதுக்கு என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு எதுக்குடி ஒத்த கால்ல நின்ன? வேலை செய்யாம இருக்கிறதுக்கு இது என்ன புது நடிப்பா?" என்று தீரன் கேட்க.

உடலில் ஏற்பட்ட ரணத்தை காட்டிலும் மேலும் ரணமாய் அவனின் வார்த்தைகள் இதயத்தை தைக்க மேலும் இரண்டும் சேர்ந்து தாள முடியாமல் அழுதாள் மிருதி.

"நான் வேற பொண்ண காதலிக்கிறேன்னு தெரிஞ்சும், நான் கல்யாணாம்னு பண்ணா மாமாவை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு ஒத்தைகால்ல நின்னு அடம் பிடிச்சியாமே? வெக்கமால்ல உனக்கு. உன்னால தான் என்னோட வாழ்க்கை இப்படி தலைகீழா ஆகிடுச்சு. எங்கம்மா எங்க... பையன் வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட போறான்ன்னு இதான் நேரம்னு என்னை பிளாக்மெயில் செஞ்சு உன்னை என் தலைல கட்டி வச்சிட்டாங்க. பிடிக்காத ஒரு பொண்ணுகூட வாழு வாழுன்னா எப்படி வாழ்றது? என் வாழ்க்கை இப்படி ஆகுறத்துக்கு நீ தான் காரணம். உன்னை என்னைக்கும் நான் மன்னிக்கவே மாட்டேன்" என்று விருட்டென்று வெளியே சென்றான்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now