இராவணனின் சீதை 34 💖

893 22 0
                                    

விக்ரம் யுகமதியிடம் தன் சிறு வயது நினைவுகளை கூறிக் கொண்டிருந்தான்... அதை சுவாரசியமாக கேட்டுக் கொண்டே சிறிது நேரத்தில் அவள் உறங்கிவிட... அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் விக்ரம்... யாஷ் எப்படியோ உண்மையை எல்லாம் தெரிஞ்சு என்னை ஏத்துக்கிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் என்கிட்ட லவ்வ சொல்ல தோன்றிக்கு உனக்கு செல்லமாக அவள் கன்னத்தில் கிள்ளியவன்...

இருந்தாலும் நீ ரொம்ப நல்லவ டி மாமி ...மத்தவங்களுக்காக யோசிக்கிற.... அதனால் தான் உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டி மாமி என்று நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு அவளை அணைத்து வாறுபடுத்துக் கொண்டான் ...காலை யுகமதி சீக்கிரமாக எழுந்து கீழே சென்று விட்டாள்.... யாஷ் மித்ரா மூவரும் பேசிக் கொண்டிருக்க வேந்தன் பிரணிதா சாவித்திரி நால்வரும் உள்ளே வந்தனர் ,.

அப்பா என அழைத்துக் கொண்டே அவரை ஓடி சென்று அணைத்துக் கொண்டால்... எப்படி இருக்க தங்கம் என்று அவள் கன்னத்தை பிடித்து கேட்டவர் ...உன்ன பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா... இந்த அப்பா உன்ன ரொம்ப நல்லா வளர்த்து இருக்கணும் என்றார் கவலையாக ... அதெல்லாம் இல்ல நீங்க என்ன நல்லா தான் வளர்த்து இருக்கீங்க.. முதல்ல வாங்க என்றவள் ... வாங்க சித்தி உள்ள வாங்க என்று தம்பி தங்கைக்கு கட்டளை இட்டவள் தந்தையுடன் அமர்ந்து கொண்டாள் ...

சாவித்திரி யுகமதியின் தலையில் வருடி என்ன மன்னிச்சிடு மதி ...நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் ... என்னதான் இருந்தாலும் நானும் ஒரு பொண்ணு பெத்து இருக்கேன் அப்படின்னு தோணாம உன்ன ரொம்ப கொடுமை படுத்திட்டேன்... இந்த கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் உணர்ந்துட்டேன் என்னை மன்னித்துவிடு என்று அவர் கேட்க ....அய்யோ என்ன சித்தி பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க...

எங்க அம்மா சொல்லிருந்தா அவங்க கிட்ட இப்படி கோவச்சுக்கிட்டு போயிருப்பனா... விடுங்கோ மன்னிப்பு எல்லாம் கேட்காதீங்க என்று சொல்ல ....இது உன் பெரிய மனசு காட்டுது... ஆனால் எனக்கு உன்னோட உண்மையான மன்னிப்பு வேணும் என்று கேட்க ... சித்தி இதெல்லாம் விடுங்கோ... நான் உங்களை மன்னிச்சிட்டேன்னு நினைச்சுக்கோங்கோ.. உங்க மேல எனக்கு கோபம் எல்லாம் இல்ல என்றவள் தம்பி தங்கைகளிடம் பேசிக் கொண்டிருந்தார்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now