இராவணனின் சீதை 19 💖

776 22 3
                                    

அமைச்சர் சந்தர பாண்டியன் கடுப்புடன் தனது வீட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார் ... யாஷ் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை... தனக்கு எதிராக ஆதாரம் திரட்டப்பட்டவுடன் மீட்டிங் இருந்த காரணத்தினால் யார் என்று கேட்காமல் கொலை செய்ய சொன்னவர்... தனது மருமகன் தனக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி உள்ளான் என்று தெரிந்து உடனடியாக அவனைக் காண ஹாஸ்பிடல் ஓடி வந்தார்...

ஆனால் அவன் அத்தனை பேர் முன்னிலையில் கையில் ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸை கழட்டி எறிந்து விட்டு வேகமாக போனதை எண்ணி அந்த பொண்ணு மேல உனக்கு அவ்வளவு பாசமா ...அவ இருந்தா தானே இப்படி எல்லாம் பண்ணுவ என்று குரோதமாக மனதுக்குள் எண்ணியவர் ...தனக்கும் அந்த வயதில் ஒரு மகள் உள்ளாள் என்பதை மறந்து விட்டார்...

அண்ணா இப்பவே மணி மூன்றாவது நம்ம பொண்ணுங்களை இன்னும் சப்ளை பண்ண ஆள் போகல... பாக்கி ரெண்டு பொண்ணுக்கு என்ன பண்றது என்று பெண்களை கடத்துபவன் கேட்க ...சட்டென யுகமதி தான் அவர் மனதில் தோன்றினாள்... யுகமதியை எப்படியாவது அங்கே அனுப்பி விட வேண்டும் என்று சிந்தித்த அவரது கேவலமான புத்தி... இந்த விஷயத்தை தள்ளிப்போடு கொஞ்ச நாள் கழிச்சு அந்த பொண்ணுங்கள அனுப்பிடலாம்...

இரண்டு பொண்ணுக்கு நான் ஏற்பாடு பண்றேன் என்றவர் தனது அறைக்கு சென்று விட்டார் ...ஏனென்றால் உடனடியாக எதையும் செய்ய முடியாது... இப்பொழுதெல்லாம் தங்களையே கண்காணிக்க நிறைய ஆட்களை போலீசாரால் போட்டுள்ளது என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார் .. முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கம் என்பதால் இந்த கடத்தல் தொழில் எல்லாம் சுலபமாக செய்து வருகிறார் சுந்தரபாண்டியன்...

யாஷ் இங்கிருந்து சென்றவன் விக்ரமின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றான்... அவ்வளவாக அந்த ஏரியாவில் வீடுகள் எதுவும் இல்லை ...பெரியதாக உள்ள வீட்டில் வேகமாக உள்ளே சென்றான்.. கதவு உள் பக்கம் தாழ்பாள் போட்டிருக்க எப்படி செல்வது என்று தெரியாமல் கைகளில் அடிபட்டு இருப்பதை மறந்து தனது ஜானுக்காக அந்த கட்டிடத்தில் ஓரத்தில் உள்ள கம்பியின் மேல் ஏறி உள்ளே சென்றான்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now