இராவணனின் சீதை 10 💖

890 20 3
                                    

யாஷ் தேவ் தனது கோபத்தை வண்டியின் மீது காட்டிக் கொண்டிருந்தான் ...என்ன தைரியம் இருந்தால் அந்த ஆளு எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிப்பான்... எங்க அம்மாவோட அண்ணன் என்பதற்காக அவனை இவ்வளவு நாள் விட்டு வச்சிருந்தேன்... பணத்துக்காக என்ன வேணா செய்வான் போல என்ன ஜென்மமோ என்று நினைத்துக் கொண்டிருந்தான்....

அவனுக்கு தனது ஜானுவை தன்னிடம் இருந்து மூன்று வருடம் பிரித்ததற்காக தண்டனை தர சரியான நேரத்தை பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான்.... தனக்கு இருக்கும் பலத்தை வைத்து சுலபமாக அமைச்சர் சந்தர பாண்டியனை விழ்த்தி விடலாம் ...ஆனால் அவன் பெரிதாக மக்களிடையே அவமானப்பட வேண்டும்...

அவன் எடுத்த நல்ல பெயரை அழித்து அவன் உண்மையான முகத்தை படம் போட்டு காட்டவே இவ்வளவு நாள் அமைதியாக இருக்கிறான்... உனக்கான நேரம் ரொம்ப தூரம் இல்லை என்று மனதிற்குள் சொல்லியவன் தனது வீட்டிற்குள் நுழைந்தான்....

என்றும் இல்லாத மகிழ்ச்சியுடன் தனது தாய் தந்தை இருக்க கண்டவன்.... என்ன மீனு இன்னிக்கி உங்க முகம் ரொம்ப சந்தோஷமா இருக்கு... உங்க வீட்டுக்காரர் ஏதாவது கிஸ் கொடுத்தாரா என்று கேட்க... அப்பா அம்மா கிட்ட பேசுற பேச்சா இது என்று அவனது தோளில் கட்டினார் ஜீவானந்தம்....சரி சரி நேரா விஷயத்துக்கு வாங்க என்று சொல்ல...

என்ன விஷயம் ஜானுவை நம்ம வீட்டுக்கு நிரந்தரமா கூட்டிட்டு வர்றது பத்தினது தான் என்று கூற.... அவனது கண்கள் நட்சத்திரம் போல மின்னியது.... எப்போ கூட்டிட்டு வர போறீங்க என்றான் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்...தனது மகனின் முகத்தை பார்த்தவர்கள் சூரியனின் பிரகாசம் போல் மின்னும் அவன் முகத்தை தடவி கொடுத்தபடியே கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வந்துடலாம் டா என்றார்கள் ....

ஜானு வீட்டிற்குள் நுழைந்ததும் அவளது டியூஷன் மாணவர்கள் வந்திருக்க அனைவருக்கும் பாடம் எடுத்துவிட்டு மற்ற வீட்டு வேலைகள் செய்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தாள்... சாவித்திரி வேந்தன் இருவரும் அவள் முன் வந்து நின்றார்கள்.. ஜானு உனக்கு வயசு ஆகிட்டு போகுது... உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு அப்பாக்கு ரொம்ப ஆசையா இருக்கு ...அதனால என்று அவர் இழுக்க...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now