இராவணனின் சீதை 5 💖

941 26 1
                                    

மதியை வீட்டிலிருந்து யாஷ் கூட்டிக்கொண்டு முதலில் மாலுக்கு செல்லலாம் என்று நினைத்திருந்தான்... அதையே அவளிடமும் கூற இங்கே வேணாலும் போகலாம் ஆனால் சீக்கிரம் வந்துடனும் என்றால் நிபந்தனையுடன் ...நீ இதுக்கு ஒத்துக் கொண்டதே போதும் என்று அவள் தாடையை பிடித்துக் கொஞ்சி விட்டு பாடிகார்டிடம் ஒரு மாலின் பெயரை சொல்லி அங்கு போக சொன்னான் ....

உங்க மாமா பெரிய ஆள் தான் போல உனக்காக பாடிகார்ட் எல்லாம் அரேஞ்ச் பண்ணி தரார் என்று மதி சொல்ல... பின்ன இருக்காதா அவரோட பதவிக்கு நிறைய எதிரிங்க வராங்க... அவங்க தங்கச்சிக்கும் தங்கச்சி பையனுக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு இப்படி பண்ணி இருப்பாரு என்றான் வெளியே பார்த்துக் கொண்டு...

அவன் கைகளை யுகமதி பிடித்துக் கொண்டு உனக்கு ஏதாவது ஆபத்து வந்து இருக்கா என்றால் கண்ணில் கலவரத்துடன் ....அட என்னை யாரு தாக்க போறாங்க எனக்கு அந்த அளவு எதிரியும் கிடையாது என்றான் மதியிடம்... அந்த நேரத்தில் முன் சீட்டில் இருந்த பாடிகார்ட் ஸ்டேரிங்கை அழுத்தமாக பிடித்து பிரேக் போட மதியும் யாஷும் அந்த திடீர் செய்தால் முன் சீட்டில் முட்டிக்கொண்டனர்...

தலையை தேய்த்தபடியே என்ன ஆச்சு என்றான் யாஷ் அந்த பாடிகாட்டிடம் ...அவன் திரும்பி பார்த்து ஆடு குறுக்க வந்துட்டு என்றான்... அவன் கூறியதைக் கேட்டு யாஷ் சரி என்று மதி இடம் திரும்ப அவளோ அந்த பாடிகார்டை பார்த்து பயந்து அமர்ந்திருந்தால்... ஆம் அங்கு அமர்ந்திருந்தது சாட்சாத் விக்ரமே தான்...

அவனை இங்கு எதிர்பாராத மதி பயத்தில் விழிக்க யாஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு ஒன்னும் ஆகலையே என்று நெத்தியை தேய்த்து விட்டான்...ஒன்னும் இல்ல என்றால் பயந்தபடியே.. அவளை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்தவன் இப்ப வண்டிய எடுங்க என்றான் விக்ரமிடம் ...பின்னால் யுகமதியை பார்த்தபடியே கோபம் பொங்க வண்டியை இயக்கினான் விக்ரம்....

யாஷ் மற்றும் அவளுடைய தந்தையிடம் மட்டும்தான் அவள் இயல்பாக இருப்பாள்.... இவ்வளவு நேரம் இருந்து இயல்பு நிலை மாறி அவனை கண்டதும் ஒரு பதற்றம் மனதில் ஒட்டிக்கொண்டது ...தனக்கு எதுவும் நடந்தாலும் யாஷிக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று அவனுடைய கரத்தை கட்டியமாக பிடித்துக் கொண்டாள்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now