இராவணனின் சீதை 17 💖

821 24 6
                                    

ஜீவானந்தம் டீஜீபி சதாசிவம் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் பேச்சற்று அமர்ந்திருந்தார் ....ஜீவானந்தம் அதிர்ச்சியானதை பார்த்து லேசாக சிரித்த சதாசிவம் இதை சாதாரணமா தான் சொன்னேன்... உங்க பையன் மேல எனக்கு எந்த தனிப்பட்ட கோபம் இல்ல... நீங்க உங்க பையனுக்கு அடிபட்டிச்சு-ன்னு சொன்னதும் எனக்கு முதல்ல ஞாபகம் வந்தது இதுதான்...

அடிபட்டதற்கு காரணம் என்ன யாருன்னு நான் கண்டுபிடிச்சு சொல்றேன்ன் என்று நிறுத்திவிட்டு...பின் ...நீங்க சொன்ன உங்க மருமக என் பையன் அடி வாங்குனதுக்கு காரணமான அதே பொண்ணு தான என்று கேட்க ...மௌனமாக ஆம் எனும் விதமாக தலையிட்டிர் ஜீவா ...கேஸை சீக்கிரமா முடிச்சு தரேன்... உங்க நம்பர் என்கிட்ட இருக்கு சார்...

அந்த பொண்ணு உங்க பையன் இரண்டு பேரும் பத்திரமா உங்களுக்கு கிடைப்பாங்க... என் மேல நம்பிக்கை வைங்க சார் நீங்க கிளம்பலாம் என்று அவர் சொல்ல... ஜீவானந்தம் தயங்கிக்கொண்டே உங்க பையன் இப்போ எப்படி இருக்காரு என்று கேட்டார் ...அந்த சம்பவம் நடந்ததுக்கப்புறம் அந்தப் பையனோட அப்பா கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு முயற்சி பண்ணினேன் ...

ஆனால் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க... இப்போ உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் சார்... அதை எல்லாம் அப்பவே மறந்துட்டேன் என்று பொறுமையாக கூறினார்.. ஜீவானந்தம் சிறு தலையசைப்புடன் கிளம்பி விட்டார் ....சதாசிவம் கோவத்துடன் அமர்ந்திருந்தார்... தேவ் அடிபட்டதற்கு காரணம் யார் என்பதை அவர் அறிவார்...

ஆனால் ஜீவானந்தத்திற்கு மேலும் கவலை கொடுக்க வேண்டாம் என்று எண்ணி விட்டு விட்டார் ...ஆனால் கண்டிப்பாக நேரில் சென்று தட்டிக் கேட்க வேண்டும் என்று நினைத்தவர் அடுத்த திட்டத்தை யோசித்துக் விட்டு வெளியேறினார்...

இங்கு மதியை அழைத்துக்கொண்டு கோபமாக கிளம்பிய விக்ரம் அவளை தனியாக வீட்டில் விட மனம் வரவில்லை... அமைச்சர் பொருளை கைமாற்றும் படி கூறியிருந்தால் ஹார்பருக்கு அவளையும் சேர்த்து அழைத்து சென்றான்... அங்கு அவர்களுக்கு முன்பாக செந்தில் மணி இருவரும் அகீர் பாயுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now