இராவணனின் சீதை 25 💖

780 24 2
                                    

மித்ராவால் தான் தற்போது யுகமதி உயிரோடு இருப்பதாய் அவள் கூறியதும் பதறிய யாஷ் எப்படி என்று பயத்துடன் கேட்க ... அன்னைக்கு கோயில்ல நான் அமைச்சர் சுந்தரபாண்டியன் பார்த்தேன்... பயத்துல உள்ள ஒழிய போகும்போது என்ன பாத்து மித்ரா என் பின்னாடியே வந்து இருக்கா என்று அந்த நாளை நினைத்துப் பார்த்தால்...

சுந்தரபாண்டியன் கண்களில் சிக்காமல் யுகமதி கோயில் இருந்து எப்படியாவது பாடிகார்ட் இருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று ஒரு ஓரத்தில் மறைந்து இருந்தால்... அவளை பார்த்த மித்ரா யுகமதி கையைப் பிடித்து கோயிலில் உள்ளே இழுத்து சென்றாள்... பதட்டத்தில் கையை விடுவித்துக் கொள்ள முயற்சித்த யுகமதியை ப்ளீஸ் அக்கா என்னை நம்பி வாங்க என்று மித்ரா இழுத்து சென்றாள்...

ஒரு மறைவிடத்தில் இருவரும் நின்றபின் அக்கா இப்ப நான் சொல்றத மட்டும் கேளுங்க உங்க உயிருக்கு ஆபத்து ...எங்க அப்பாவால... அவரு இவ்வளவு கெட்டவர் என்று எனக்கு தெரியாம போயிருச்சு... எதார்த்தமா அவர் பேசுவதை நான் கேட்டுட்டேன் ...யாஷ் மாமா இப்படி இருக்குறது உங்களால் தான்னு கோவத்துல உங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்க போறதா சொல்லிக்கிட்டு இருக்காரு... இல்ல உங்களை கொலை பண்ணனும் அப்படிங்கற ஒரு முடிவு ஓட இருக்காரு...

எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சு போயிருங்க... ஏற்கனவே அவர் கடத்தி வைத்திருக்கும் பொண்ணெல்லாம் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுட்டு நான் அவங்கள எல்லாரையும் ஒருத்தர் உதவியோடு காப்பாத்திட்டேன் ...நீங்க மாட்டிக்காதீங்க கொஞ்ச நாள் நான் சொல்ற இடத்துல இருங்க... என் ஃப்ரெண்ட் வீட்டுல இருந்தீங்கன்னா நீங்க தப்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு ..

ஏனா என் பிரண்டு வீட்டில் நீங்கள் இருப்பீங்கன்னு அவரு நினைச்சு கூட பாக்க மாட்டாரு ..ஆனால் உங்க பிரண்டு வீட்டுக்கு போனீங்கன்னா கண்டிப்பா புடிச்சிருவாரு.... நீங்க யாஷ் மாமா வீட்ல இருக்கிறது கூட ஆபத்து தான் ...அந்த வீட்டு வேலைக்காரங்க தோட்டக்காரங்க வரைக்கும் எங்க அப்பா காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டாரு ...எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சு போயிருங்க...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now