இராவணனின் சீதை 30💖

862 22 0
                                    

நீயே என்னை ஏமாத்துவன்னு நினைக்கல ஜானு என்று தேவ் கூறியதும் ...அழுதபடியே நான் உன்னை நினைக்கும் ஏமாத்தணும்னு நினைச்சதே இல்ல தேவ்... இப்படி எல்லாம் சொல்லாத என்றால் அழுகையுடன் ...அப்புறம் எதுக்காக என்கிட்ட மறைச்ச என்று கேட்க... அவனை நீ ஏதாவது பண்ணிருவேங்குற காரணத்துக்காக தான் நான் சொல்லல என்றால் திணறியபடி....

அவனை ஏதாவது நான் பண்ண கூடாதா.... அதான் ஏன்னு கேக்குறேன்... அவனை நீ விரும்புற தானே என்று கேட்க.... மௌனமாகவே இருந்தால்... இப்ப கூட நீ என்னை ஏமாத்துற... கடைசி வரைக்கும் வாழ்க்கையில் இப்படியே இருக்க போறியா... வாழ்க்கையில எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும்... அதை அடைய முதல்ல முயற்சி பண்ணனும்... சின்ன எறும்பு கூட தன்னோட வாழ்க்கைக்காக முயற்சி பண்ணும்...

அப்படி என் உனக்கு இல்லை... நீ என்னை மட்டும் ஏமாத்தல... உன்னையே நீ ஏமாத்திக்கிற ...இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருக்குமே தன்னோட ஆசையை நிறைவேத்திக்கிற உரிமை இருக்கு ...நீ கேட்டு நான் ஏதாவது பண்ணாமல் இருந்திருக்கனா... சின்ன வயசுல இருந்து உன்னோட இந்த குணம் மட்டும் போகவில்லை... உனக்கு அவனை தான் புடிச்சிருக்குன்னு நீ சொன்னா கண்ணை மூடிகிட்டு அவன் கூட சேர்த்து வைத்திருப்பேன்...

நான் என்ன அவ்வளவு கெட்டவனாவா போயிட்டேன் என்று வருத்தத்துடன் கேட்டான் ....அவள் அவனின் கேள்வியில் உண்மையை உணர்ந்து நான் அப்படி சொல்லல தேவ்... ஆனா எனக்கே குழப்பமா இருக்கு ...அவன் நல்லவனா கெட்டவனா எனக்கு ஒண்ணுமே புரியல... என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு ...

திடீர்னு ஒருத்தன் வரான் லவ் பண்றேன்னு சொல்றான்... அவனே கெடுத்துட்டான்... அவன் நல்லவனாகவும் கண்ணுக்கு தெரிகிறான் ... கொலைகாரனாவும் இருக்கான்... தீடிரென போலிஸ் அப்படின்னு சொன்னா என்ன பண்ணுறது...இத்தனை குழப்பத்துக்கு மத்தியில் என்னால எப்படி முடிவு எடுக்க முடியும் என்றால் ஆற்றாமையாக...

சரி மத்த விஷயத்தையெல்லாம் விட்டுடு... அவனுடைய காதல் உனக்கு புரியுதுதானே... அது மட்டும் யோசி நெகட்டிவான எந்த விஷயத்தையும் யோசிக்காத ...உன் குழந்தையை பத்தி நினைச்சு பாரு... இந்த விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு உறுதுணையா நான் இருக்கேன்... அவன் கூட நீ சேர்ந்து வாழ்ந்தாலும் சரி சந்தோஷமா நான் சேர்த்து வைக்கிறேன்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now