இராவணனின் சீதை 15 💖

829 22 2
                                    

யாஷ் தன் பங்களா அதிரும் படி கத்தினான்.... யுகமதிக்கு இந்த நிலை வரும் என்று தெரிந்திருந்தால் அவளை கையோடு அழைத்து வந்திருப்பான்... ஜானு அந்த ****** என் கையால கொன்னு அந்த ரத்தத்துல உன்னை குளிப்பாட்டி சுத்தப்படுத்துறேன் ... உன் மேல எந்த கலக்கமும் இல்லை ... உன்னோட மனசு எவ்வளவு வலிச்சிருக்கும் ..என்னை தேடிருப்பல டி என்று கண்ணீர் வழிய ஆத்திரத்துடன் கத்தினான்....

தனது பிஏ- விற்கு அழைத்தவன் அனைத்து வேலைகளையும் அவனை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு ஏதாவது முக்கியம் என்றால் காணொலி மூலம் முடித்துக் கொள்ளலாம் என்று கூறியவன் அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் ஏர்போர்ட் வந்து சேர்ந்தான் ...இன்று பார்த்து அனைத்து விமானங்களும் சற்று தாமதமாக கிளம்ப அடக்கப்பட்ட கோவத்துடன் அமர்ந்திருந்தான்...

விக்ரம் இப்போது கையில் கிடைத்தால் கூட தனது வேறும் கைகளாலேயே கொல்லும் அளவிற்கு வெறி... தனது பாடிகார்ட்-சிற்கு அழைத்து யுகமதி எங்கே இருக்கிறாள் என்று கேட்டறிந்து கொண்டவன் ...மதியத்திற்கு மேல் அங்கு வந்து சேர்ந்து விடுவேன் என்று கூறி வைத்து விட்டான் ...ஜானு ஜானு என்று புலம்பலுடன் கண்கள் சிவந்து தனது விமானத்திற்கான அழைப்பிற்கு காத்திருந்தான்...

இங்கு யுகமதியை உள்ளே அழைத்து சென்ற விக்ரம் தன்னால் முடிந்த அளவுக்கு பொறுமையாக இங்க பாரு யுகா நேத்து நான் நடந்தது ரொம்பவும் தப்புன்னு எனக்கே தெரியும் மன்னிப்பு என்கிற சின்ன வார்த்தை கேட்டா உன் மனசு சமாதானம் ஆகாது...அனுபவிக்கிறவுங்களுக்கு மட்டும் தான் வலி தெரியும்...

அதுக்காக யாரும் உன்னை என்கிட்ட இருந்து கூட்டிட்டு போய்டுவாங்கன்னு மட்டும் நினைக்காதே... அது என்னைக்கும் நடக்காது புரியுதா என்றவன் தனது ரத்தம் படித்த ஆடையை மாற்றுவதற்காக சென்றுவிட்டான்... ஆனால் மதி மனதிற்குள் கோபமான நேரத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது ...அது தவறான வழிக்கு சென்று விடும் அதனால் தன்னையே கட்டுப்படுத்தி கண்டு அமர்ந்திருந்தால் ....

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now