இராவணனின் சீதை 16💖

784 22 3
                                    

யாஷ் தனது ஜானுவை காண செல்லாமல் நேராக சுந்தரபாண்டியன் பற்றிய ஆதாரங்களை சேகரிக்க கூறியிருந்த நிறுவனத்திற்கு முன் தனது வண்டியை நிறுத்தினான் ....கண்டிப்பாக இன்று நடக்க இருக்கும் மீட்டிங்கில் அவரைக் பற்றி கூறி இவ்வளவு நாள் அவர் சம்பாதித்து வைத்த பெயர் புகழ் அனைத்தையும் வீழ்த்த வேண்டும் என்பது அவன் முன்பே யோசித்து வைத்திருந்தது தான் ...

ஆனால் தன் ஜானுவிற்க்கு இவ்வாறு நிகழ்ந்ததற்கு ஆரம்ப புள்ளியே அவர் தான் என்பதை ஆதாரங்கள் மூலம் அறிந்த அவன் மனது அவரை சிறைக்கு பின் அடைக்க மனம் இல்லை.... தனது கையாலே அவரை கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவன்.. இப்பொழுது முதல் படியாக ஆதாரங்களை கையில் வாங்க வந்தான் ...

அந்த கட்டிடத்தில் இருந்து வேகமாக ஓடி வந்த ஒருவன் யாஷ் சேகரிக்க கூறியிருந்த கோப்புகளை அவனிடம் சரி பார்க்கும் படி கூறினான் ....எதையும் பார்க்கும் நிலையில் அவன் இல்லை வேகமாக கோப்பைகளை வாங்கிக் கொண்டு தனது வண்டியில் ஏறி அதிவேகமாக காரை செலுத்தினான்... ஜானு கொஞ்ச நேரம் கண்டிப்பா நான் உன்னை தேடி வரேன் என்று அவன் வாய் முணுமுணுக்க எதிரில் வரும் எந்த வாகனத்தையும் கண்டு கொள்ளாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்...

ஒரு திருப்பத்தின் இடது முனையில் திரும்பும் பொழுது ஒரு குழந்தை ஓடி வர அந்த பக்கம் திருப்பாமல் வலது புறமாக வண்டியை திருப்ப எதிரே வந்த லாரியின் மீது மோதி விட்டான்... யாஷின் கார் இரண்டு மூன்று முறை சுத்தி கீழே விழுந்தது‌... அந்த குழந்தையின் தாயார் வேகமாக தனது மகளை தூக்கிக் கொண்டு காரை நோக்கி ஓடினார்.... அவனோ ஜானு என்று முனுமுனுத்தபடியே என அனைத்திடங்களையும் ரத்தம் வடிந்தபடி கடந்தான்...

அவசரமாக அங்குள்ள அனைவரையும் கத்திக் கூப்பிட்ட அந்த குழந்தையின் தாய் அனைவரின் உதவியுடன் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்... மருத்துவர்கள் கண்டுபிடித்து விட்டனர் இது யாஷ் தேவ் மல்டி மில்லியனர் ஜீவானந்தத்தின் ஒரே மகன் என்று... உடனடியாக அவனுக்கு சிகிச்சை ஆரம்பித்தனர்....

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now