அங்கும் இங்கும் ஆட்கள் பரபரப்பாக சுற்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.. ரிசப்ஷன் பெண்ணிடம் யாஷ் தேவ்வை பார்க்க வேண்டும் என்று தேவேந்திரன் கேட்டதும் ...அவள் உடனடியாக அவனுக்கு அழைத்து விட்டால் ...எதற்காக போலீஸ் என்ன பாக்கணும் என்று யோசித்தவன் அவனை உள்ளே அனுப்புமாறு கட்டளையிட்டான்....
உள்ளே நுழைந்த தேவேந்திரனை பார்த்து முதலில் குழம்பியவன் பின் அடையாளம் கண்டு கொண்டு அவனை நோக்கி அடிக்க வர ....நான் சொல்றத முதல்ல கேளு... நீயும் உன் பிரண்டு மாதிரி அவசரப்பட்டு முடிவு எடுக்காத என்றான்... அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் சட்டையை பிடித்திருந்தான் தேவ்... என் ஜானு உன்னால எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா... சுட்டு போட்டா கூட திரும்ப வர என்று அவனை அடுக்க சென்றான்..
இந்த விஷயத்தை போட்டு யாரை நம்ப வைக்க பாக்குற என்று தேவ் கேட்க... இதுதான் உண்மை... அது வேஷம் என்றான் தேவேந்திரன்... நீ சொல்றதெல்லாம் கேட்க நான் என்ன முட்டாளா என்று கேட்க... ஒரு முட்டாளா இருந்தா கண்டிப்பா கேக்க மாட்டான் ஆனா அறிவாளியா இருந்தா இவன் ஏதோ சொல்ல வரான்னு புரிஞ்சிருக்கும் என்று அவன் நக்கலாக சொன்னான் .... யாஷ் முதல் முறையாக நிதானத்துடன் அவன் கூறியதை கேட்கலாம் என்று முடிவெடுத்தான்...
அவனை விட்டுவிட்டு தனது நாற்காலியில் அமர்ந்தான் யாஷ்... என்ன வேணும் உனக்கு.... ஆனா என் ஜானுவை மட்டும் கேட்காதே என்று அவன் கூற... என் பொண்டாட்டியை நான் என் உன்கிட்ட வந்து கேட்க போறேன்... எனக்கு வேணும்னா நானே எடுத்துப்பேன் ....இது அந்த பிரச்சனை இல்லை உன் மாமா அமைச்சர் சுந்தரபாண்டியன் பத்தினது என்று அவன் கூறியதும்..
நீ அவனோட அடியாள் தானே ...அந்த ஆள் பத்தி உனக்கு தெரியாதா ...அதான் செத்துட்டானே என்று கோவமாக கூற... அவன் எங்க செத்தான் அவனை நான் தானே அடிச்சு கொன்னேன் என்று கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து யாஷை பார்த்தான்... என்ன உளறுற நீ... அந்த ஆள் தான் விஷம் சாப்பிட்டு செத்துப் போனாரு என்றான் ... ஏனென்றால் அவன் தானே மித்ராவிடம் கொடுத்து அனுப்பியது...நெருக்கு நேர் மோத ஆசை தான் இருந்தாலும் அவன் உயிர் ஜானுவுக்கு எந்த வித அவப்பெயரும் வராமல் இருக்கவே இப்படி செய்தான்....
YOU ARE READING
இராவணனின் சீதை 💖
Romanceஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .
இராவணனின் சீதை 29
Start from the beginning