💚 இணை 20

Start from the beginning
                                    

சிவபெருமானின் ஏவல் பூதகணங்களுள் ஒரு பூதகணம் போல் அவள் அருகில் வந்து நின்றவன், "இஸ்கூலுக்கு டைமாச்சு! கெளம்பு போவம்!" என்றான்.

"இல்ல செல்வா! நான் இன்னிக்கு லீவ் போட்டுக்கப்......!" என்று சொன்னவளின் பேச்சை இடையில் தடுத்து,

"போறதில்ல..... நீ இன்னிக்கு லீவ் போட்டுக்கப் போறதில்ல! செல்வாவோட கிளம்பி ஸ்கூலுக்குப் போய்ட்டு வா!" என்று உறுதியான குரலில் தன் மகளுக்கு கட்டளை இட்டார் சபாபதி.

கிச்சனுக்குள் நின்று பாலை காய்ச்சுபவருக்கு ஹாலில் நடக்கும் இந்த பேச்சுக்கள் எல்லாம் காதில் கேட்டிருக்கும் தானே? அப்புறம் ஏன் இந்த அம்மம்மா என்ன ஏது என்று ஒப்புக்காவது ஒரு வார்த்தை கூட கேட்க வர மாட்டேன் என்கிறார் என்று எரிச்சலடைந்த சாம்பவி, கோபமும் தவிப்புமாக நின்று கொண்டிருந்த போது ஒரு தோளில் புத்தக மூட்டையுடன் வந்தவன் இன்னொரு தோளுக்கு பாரம் குறைகிறது என்று அவளை ஒரே தூக்காக தூக்கிக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான். அவன் சாம்பவியை அப்படி தூக்கியதை சமையலறை ஜன்னலில் இருந்து பார்த்த கல்யாணி விறுவிறுவென ஹாலுக்கு வந்து தன் மாப்பிள்ளையின் முன்னால் நின்றார்.

"இதென்ன குடும்பம் நடத்துற வீடா என்னது மாப்ள? பவிம்மா வயசென்ன, அந்த பையன் வயசென்னன்னு உங்களுக்கு தெரியும்ல? ரெண்டு பேரயும் இப்டி கட்டிப்பிடிச்சுக்கிட்டு உருளச் சொன்னீங்கன்னா இது எங்க போய் முடியும்? ச்சீச்சீ......!" என்று சொன்ன கல்யாணியை எங்கே வயதையும் உறவையும் பாராமல், ஓங்கி அறைந்து விடுவோமோ என்று நினைத்து விரல்களை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தார் சபாபதி.

"உங்களுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லயா? நாலு எட்டு தூக்கிட்டுப் போறது தான் உங்க பாஷையில கட்டிப் பிடிச்சு
உருள்றதா? இவ்ளோ வருஷம் உங்க கிட்டயா போயி எங்குழந்தைய விட்டு வச்சிருந்தேன்? ஐ'ம் அன் அன்குவாலிஃபைட் பாதர்! லிஸன்..... மிஸஸ் தனசேகரன்
செல்வாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவன் நான்! ஸோ, அவனால எம்பொண்ணு வாழ்க்கையில ஏதாவது ப்ரச்சன வந்துச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பேத்துக்குறேன். இப்ப நாம பேச வேண்டிய விஷயத்த பேசி முடிப்பமா?" என்று கேட்டவரிடம்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now