இப்போது தன்னை திட்டுபவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் "நீங்க வீட்டுக்குப் போனவுடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணு!" என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டார்.
"பண்றாங்க ஒன்க்கு இன்பாமு! கேக்குற ஒத்த கேள்விக்காச்சு பதில் சொல்றானா பாரு! நம்மளாண்ட தான் சொம்மா ரூல்ஸ காட்டிக்கினு திரியறது! லூசுக்கம்முனாட்டி!" என்று அவரை திட்டியபடி தனது அலைபேசியை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு காரை நோக்கி வந்தான்.
சாம்பவி கார் பார்க்கிங்கில் நின்ற காரில் இருந்து இறங்கி வேகமாக
தனது ஹீல்ஸை கழற்றி காருக்குள்ளேயே போட்டவள் தான்..... அதற்குப் பின் குதிரைக்குட்டி போல் துள்ளி துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டாள்."இன்னாம்மே..... ரொம்ப குஜாலாக்கீற போல்ருக்கு?" என்று சிரிப்புடன் கேட்டவனின் கையைப் பற்றிக் கொண்டவள்,
"அஆங்பா!" என்று அவனைப் போலவே அவனிடம் பதிலுரைத்தாள்.
"டேய் டாம்பாய்; நான் நைட் டைம்ல பீச்சுக்கு வர்றது இதுதான் பர்ஸ்ட் டைம் தெரியுமா? நான் இன்னிக்கு இங்க என்ன சேட்ட பண்ணுனாலும், நீ அத ரூல்ஸ் கிட்ட போட்டுக் குடுக்கக்கூடாது. ப்ராமிஸ் பண்ணு!" என்று கேட்டவளிடம்,
"இது வேறயா?" என்று கேட்டு சிரித்துக் கொண்டவன் அவளது உள்ளங்கையில் கிள்ளி ஒரு அடியைப் போட்டான். கடனே என்று ஒருவருக்கொருவர் இப்படி உள்ளங்கையில் கிள்ளி ஒரு தட்டு தட்டிக் கொள்வது தான் அவர்களைப் பொறுத்தவரை சத்தியம்!
"கண்ணு.... ஒநைனாவாண்ட நான் எத்தையும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கியிருக்க! அதுனால நீ இன்னிக்காச்சு செல்வா சொல்ற பேச்ச கேக்கணும். தண்ணியில
ரொம்ப ஆட்டம் போடக்கூடாது! நான் எப்பக் கூப்டுறனோ, அப்ப விறுவிறுன்னு எம்பின்னால நீ வந்துனே இருக்கணும் தெர்தா?" என்று அதட்டலாக கட்டளைக் குரலில் அவளிடம் கேட்டவனிடம்,"ம்ஹூம்......! நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது! போடா!" என்று சொல்லி அவனுக்கு அழகு காட்டினாள் சாம்பவி.
![](https://img.wattpad.com/cover/306012300-288-k182314.jpg)
YOU ARE READING
இளையவளோ என் இணை இவளோ✔
Romanceகட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இ...
💚 இணை 14
Start from the beginning