காலை சீக்கிரமாகவே விழிப்பு தட்டிய பைரவி எழுந்து செல்ல மனமே இன்றி படுத்துக்கிடக்க அவள் கணவன் அவளை அணைப்பதற்கு பதிலாக தலையணையை இறுக்கமாக பற்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
வலுவான அவன் தேகத்தையும், உறக்கத்திலும் இளக்கம் இல்லாமல் வீம்பாக உறங்கும் அவன் முகத்தையும் ஆசையாக அளந்தவள் தலையணையை அவனிடமிருந்து பிரித்து அது இருந்த இடத்தை தான் ஆக்ரமித்துக்கொண்டாள்.
தலையணை சுகத்தை விட பெண் மேனி உஷ்ணத்தை கூட்டும் அல்லவா? பஞ்சு உடலின் வித்யாசம் தேவாவை கண்கள் லேசாக திறக்க வைக்க, பைரவிக்கு பின்னாலிருந்த மணியை பார்த்தான்.
ஐந்து கூட ஆகவில்லை. தூக்க கலகத்தோடு அவளை சந்தேகமாய் பார்த்து, "தூங்கு சக்கரை" என மெதுவாக உறங்க முற்பட்டான்.
"ஏன் உங்களுக்கு கை எல்லாம் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு?"
சோர்வாக கண்களை திறந்து, "சந்தேகம் கேக்குற நேரமாடி இது?"
"வேற எந்த நேரத்துல கேக்கணுமாம்?"
"பேச்சு குடுக்காத பைரவி தூக்கம் போய்டும்" தேவா அதட்டவும்,
"நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல" அவன் துயிலை கலைப்பதற்கு வேண்டும் என்றே காதோரம் பேசினாள்.
மௌனமாக தேவா உறங்க அவன் கன்னத்தை உரசும் சாக்கில் அவள் கைகள் வலிக்காமல் கன்னத்தில் அலைபாய,
ஆசை துளிர்த்து திடுக்கிட்டு விழித்த தேவா மேலும் அவள் கைகளை துளாவ விடாமல் அவள் கையை பிடித்திட, "என்னடி பண்ற?" என்றான் மோகமும் ஆசையுமாக.
வித்யாசம் தெரிந்த அவன் பார்வையில் சிரித்தவள் அவன் கண்களை கை கொண்டு மூடி, "என்ன இது பார்வை மாறுது? கண்ண நோண்டிடுவேன் பாத்துக்கோங்க"
அவள் கையை தட்டிவிட்டு, "என் பொண்டாட்டிய நான் எப்படி வேணாலும் பாப்பேன். உனகென்னடி நோகுது?"
"என்ன மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கீங்க நியாபகம் இருக்கா?"