மழைத்துளிகள் என் கண் இமைகளை நனைத்தன. திடுதிடுப்பென கண்களைத் திறந்தால் மஞ்சள் நிறமும் கறுப்பும் மங்கலாய் தெரிந்தன. சோப் வாசனை நுரையீரலில் படிந்து மணமணத்தது. அவளின் முகம் விலகியதும் அவளின் ஈரக் கூந்தலிலிருந்து விழுந்த முத்தென அறிந்தேன். சின்னதாய் புன்னகைத்து, "Good morning! Its Saturday!" என்றாள்.
தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கினேன். நான் திருதிருவென விழிப்பதைக் கண்டு அவள் அறிவித்தாள்,"10.30 மணி ஆச்சு."
வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் சூரியன் உச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். அதிகாலையின் குளிர் வெப்பமடைந்து தற்போது கொதித்துக்கொண்டிருந்ததைக் கூட அறியாமல் துயில் கொண்டிருந்தேன். காரணம் நேற்றிரவு வந்த மனோஜின் மெசேஜ் மனதைச் சலனமடையச் செய்ததால் வெகு நேரம் கழித்து சோர்வினால் தூக்கத்தைத் தழுவினேன். லாவண்யாவின் செயற்பாடுகளும் அவள் மேல் எல்லையற்ற அன்பு வைத்திருந்த மனோஜும் கனவை ஆர்பரித்தனர்.
என்னருகில் அமர்ந்து elbowவை மெத்தையில் ஊன்றி கை தலையைத் தாங்கியிருந்தப்படி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். மலர்ந்த முகமும் அமைதியாய் என்னை நோக்கிய கண்களும் அவளின் சந்தோஷத்தைச் சுட்டிக்காட்டின. கரையைக் காணா கடலாய், நிலவைக் காணா வானாய், ஒற்றைக் குரலில் கூவும் குயிலாய் ஓர் ஏக்கம் உதித்தது. நகர்ந்து அவளின் மடியில் தலை சாய்த்தேன். எல்லோருக்கும் கிடைப்பதல்ல இந்த அன்பு என தோன்றி சிந்தனை மீண்டும் மனோஜின் பக்கம் திரும்பியது.
"இன்னைக்கு எங்கயாவது வெளிய போறோமா?" ஆவலுடன் வினவிய அவளுக்காக நேற்றைய எண்ணங்களை ஒதுக்கிவிட்டு இன்றைய நாளை வரவேற்றேன்.
"ஆமாம். ப்ரெண்ட் கூப்டிருந்தான் பட் முடிஞ்சா வர்ரேன்னு சொல்லியிருந்தேன். போற போக்கை பார்த்தா அவன் கூப்டதுக்கே போயிரலாம்ன்னு தோனுது."
"எங்க கூப்டாரு உங்க ப்ரெண்ட்?"
"அவ்ளோ பெரிய விஷயம் இல்ல பட் இருந்தாலும் நம்ம போகாத இடம் தான்."
YOU ARE READING
அவளை காதலித்ததில்லை
Romanceசின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal