வேகமாய் நடந்து வந்து என் காரின் கதவை திறந்து உடனே அங்கிருந்து வண்டியை எடுத்தேன். அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் வெறுப்பும் அருவெறுப்பும் தான் அதிகரித்ததன. எதிர்பார்த்தது போல் என்னுடைய போன் ஒலித்தது. போனைக் கடைக்கண்ணால் பார்த்ததும் அவள் தான் என்று தெரிந்து போனை எடுக்கவில்லை. முதல் முறை போன் அடித்து பின் ஓய்ந்தது. என் கோபத்தை உணர்ந்து அவள் மீண்டும் போன் பண்ணவில்லை.
சற்று தூரம் சென்றதும் தான் தோன்றியது, இப்போது எங்கே செல்வது? பசி வேறு வயிற்றைக் குடைந்தது. மனோஜ்கு போன் அடித்தேன் ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. போனை மேசையில் வைத்துவிட்டு ஆபீஸ் முழுக்க ரவுண்ட் அடிப்பது அவன் வழக்கம் என்பதால் அவன் போன் எடுக்காததை பொருட்படுத்தவில்லை. போனை எடுக்கவில்லை என்றால் ஆபீஸில் தான் இன்னும் இருக்கிறான் என்று சுதாரித்துக்கொண்டு காரை மீண்டும் ஆபீஸ் பக்கம் செலுத்தினேன். கொஞ்சம் வீராப்பாக ஆபீஸிலிருந்து சென்ற பின் இப்போது திரும்ப வருவது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. Wallet ஐ மறந்து விட்டோம் என்று சமாளித்துக்கொள்ளலாம்.
ஆனால் மனோஜின் மேசையை அடைந்ததும் இன்னொரு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அங்கு அவன் இல்லை. சுற்று முற்றும் தேடி பார்த்தும் அவன் கண்ணில் படவில்லை. அப்போது என் department ஆட்களில் ஒருவளான லாவண்யா என் அருகில் வந்து நின்றாள். லாவண்யாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது காரணம் அவளை வேலைக்கு சேர்த்ததோ இன்டர்வியூ எடுத்ததோ நான் அல்ல. இந்த HR ஆட்கள் ஒரு நாள் அவளை என் cabinகு அழைத்து வந்து, "உங்க departmentகு ஆள் எடுக்கனும்னு சொன்னீங்களே, இவங்கள புதுசா சேர்த்திருக்கோம்," என்று கையோடு ஒப்படைத்துவிட்டனர்.
"சார், அரை மணி நேரத்துக்கு முன்னாடியே நம்ம department இல் எல்லாரும் சேர்ந்து லஞ்ச் போய்ட்டாங்க."
ம்ம்ம் என்று தலையசைத்தேன். பிறகு தோன்றியது, அவள் மட்டும் ஏன் இன்னும் ஆபீஸில் இருந்தாள்?
KAMU SEDANG MEMBACA
அவளை காதலித்ததில்லை
Romansaசின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal