50 புதிய வாழ்க்கை

Start from the beginning
                                    

"இந்த தாலியும் குங்குமமும் உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்றான் மாமல்லன்.

"ஏன்னா அது என் புருஷனோட பேரை சொல்லுது"

"அப்படியா? என்ன உன்னோட புருஷன் பேரு?"

"மாமல்ல கிறுக்கன்..."

 அதைக் கேட்டு சிரித்த மாமல்லன்,

"கிறுக்கியோட புருஷன் கிறுக்கனா தானே இருப்பான்?" என்றான்.

"நான் கிறுக்கியா?"

"பின்ன என்ன? மூஞ்சி முகம் தெரியாத ஒருத்தனுக்காக யாராவது பதினைஞ்சி வருஷம் காத்திருப்பாங்களா?"

"நான் காத்திருந்தது ஒன்னும் வீண் போகலையே... அதனால நான் ஒன்னும் கிறுக்கி இல்ல"

"நீ எனக்காக காத்திருந்தது நல்லது தான்... அதனால தான் நீ எனக்கு கிடைச்ச..."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை யாரோ கிறுக்கின்னு சொன்னாரே..." என்றாள் எகத்தாளமாய்.

"அந்த யாரோ, தானும் ஒரு கிறுக்கண்ணு ஒத்துக்கிட்டானே..."

"நம்ம ரெண்டு பேருமே கிறுக்கு தான். டைம் ஆகுது போய் ரெடியாகுங்க"

"ஓகே ஓகே... பத்து நிமிஷத்துல ரெடி ஆயிட்டு வரேன்..." அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு குளியலறை நோக்கி சென்றான்.

.........

மாமல்லனும், இளந்தென்றலும் கோதை மற்றும் வடிவாம்பாளால் வரவேற்கப்பட்டார்கள்.

"எங்க கூட டிபன் சாப்பிட்டு தான் போகணும்" என்றார் பாட்டி.

"என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க? அப்படின்னா, மத்தியானம் சாப்பாடு போட மாட்டீங்களா? வெறும் டிபன் மட்டும் தானா? டிபன் சாப்பிட்டுட்டு நாங்க கிளம்ப வேண்டியது தானா?" என்றான் மாமல்லன்.

"என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? நம்ம எல்லாரும் ஒரே குடும்பம். நீங்க எப்ப வேணா இங்க வரலாம்... உரிமையோட என்ன வேணாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்" என்றார் கோதை.

"நீங்க சொன்னது உண்மையா ஆன்ட்டி? நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலியா?"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now