33 என்ன அது?

1K 64 12
                                    

33 என்ன அது?

 மறுநாள் காலை

மிகுந்த பிரயத்தனம் செய்து கண்களை திறந்தான் மாமல்லன். ஜுரத்தின் கடுமையால் அவனது உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது. உடலை அசைக்க முடியாத அளவுக்கு களைப்பாய் இருந்தது. இவ்வளவையும் மீறி, ஏதோ ஒரு உணர்வு, அவனது மனதை மயிலிறகாய் வருடியது. திடத்தன்மையற்ற ஏதோ ஒரு கனவு கண்டது போல் தோன்றியது அவனுக்கு. அது கனவு போல் தோன்றினாலும், நிஜத்தில் நடந்தது போலும் இருந்தது. மென்மையான ஏதோ ஒன்று, அவன் உடலை வருடியது போல் ஒரு உணர்வு...! வெண்பஞ்சு மேகத்தில் மிதப்பது போல்...! புசுபுசுவென்று இருந்த பூனைக்குட்டி அவன் முகத்தை உரசி செல்வது போல்...! அது வெறும் கனவு தான் என்றும் அவனால் நிச்சயமாய் கூற முடியவில்லை. அவனுக்கு முழுமையாய் எதுவும் நினைவிலும் இல்லை. ஜுரத்தின் கடுமையால் அவன் கண்களை திறக்கவும் முடியவில்லை. அது அவனுக்கு மிகுந்த பரவசத்தை தந்தது. என்ன அது?

அப்பொழுது தான், அங்கிருந்த சோபாவில் இளந்தென்றல் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டான் அவன். தன்னுடைய அறையில் அவளை கண்ட மாமல்லன் திக்கு முக்காடி போனான். நேற்று இரவு அவள் அவனுடய அறையிலா இருந்தாள்? வறண்டு உலர்ந்திருந்த அவனது தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளிவரவே திணறின. மெல்ல குரல் எழுப்பினான் மாமல்லன். தூக்கத்தில் இருந்த இளந்தென்றலை எழுப்ப அதுவே போதுமானதாய் இருந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள்.

அவன் விழித்துவிட்டதை பார்த்து, அவன் அருகில் வந்தாள் அவள்.

"இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?" என்றாள், லேசாய் அவனது நெற்றியை தொட்டுப் பார்த்து.

மெல்ல புன்னகைத்த மாமல்லன்,

"ஃபீவர் இல்ல. ஆனா ரொம்ப டயர்டா இருக்கு" என்றான் கம்மிய குரலில்.

"நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்"

அவள் கையை பற்றிய மாமல்லன்,

"நீ ராத்திரி எல்லாம் தூங்கலையா?" என்றான்.

"நான் நல்லா தூங்கினேனே" என்றாள் அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now