*நேத்தா? அப்படின்னா நேத்து அவரு இங்க வந்திருந்தாரா? மீட்டிங் இருக்குன்னு என்கிட்ட பொய் சொல்லிட்டு, அவர் வந்தது இங்க தானா? நான் மதுரைக்கு வர்றதுக்கு முன்னாடியே அம்மாவையும் பாட்டியும் பார்த்து பேசத்தான் நேத்து வந்திருக்கிறார் போலருக்கு... இது எல்லாம் என்னை சர்ப்ரைஸ் பண்ண தானா?* என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் இளந்தென்றல்.

மாமல்லனை பார்த்து முறைத்தபடி அவனுக்கு காப்பியை வழங்கினாள் இளந்தென்றல். அவளது கோபமான முகத்தை பார்த்து தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான் மாமல்லன்.

"என்ன தென்றல் அவரை அப்படி பார்த்துகிட்டு இருக்க? இவர் யாருன்னு உனக்கு தெரியுமா? இவர் தான் உன் காதம்பரி ஆன்ட்டியோட முன்னா. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவங்க அம்மா எழுதின ஒரு லெட்டர் அவருக்கு கிடச்சுதாம். அதை படிச்சி பார்த்து, அவங்களுடைய ஆசை என்னன்னு தெரிஞ்சுகிட்டு, நேத்து இங்க வந்திருந்தார். நீ காத்திருந்தது வீண் போகல தென்றல்" என்றார் பாட்டி.

"எனக்கு என்னமோ, அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாத மாதிரி தெரியுது" என்றான் மாமல்லன் வேண்டுமென்றே.

"ஏன் தென்றல் அப்படி நினைக்கிற?" என்ற பாட்டி.

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாட்டி? அவ மயங்கி விழுந்தப்போ நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணேனே, அப்பவே அவளுக்கு என்னை பிடிக்கலையே"

"அவளை ஒன்னும் நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம் தம்பி. அவ கெடக்குறா பைத்தியக்காரி" என்றார் பாட்டி.
 
தன்னை பைத்தியக்காரி என்று கூறிய தன் பாட்டியை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள் இளந்தென்றல்.

"இவ எப்பவுமே இப்படித் தான் தம்பி. யாரையுமே சுலபத்தில் நம்ப மாட்டா. ஆனா, நாங்க உங்களை நம்புறோம். இருங்க உங்களுக்கு பலகாரம் கொண்டு வரேன்" என்றார் கோதை அந்த முடியாத நிலையிலும்.

தன் மகளுக்கு உதவ அவரை பின்தொடர்ந்தார் பாட்டி. தன் பல்லை கடித்துக் கொண்டு, மாமல்லனை பார்த்து முறைத்தாள் இளந்தென்றல். தன் புருவம் உயர்த்தி சிரித்தான் மாமல்லன். அவனை நெருங்கி வந்தாள் இளந்தென்றல்,

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now