அவளிடம் ஒரு டப்பவை கொடுத்தான் மாமல்லன். அதில் இருந்தது ஒரு கைபேசி.
"வச்சுக்கோ. எப்ப என் கூட பேசணும்னு தோணுதோ, அப்போ எனக்கு நீ கால் பண்ணு. நான் உன்னுடைய காலுக்காக காத்திருப்பேன்"
அந்த கைபேசியின் கேமராவை, திறந்து மாமல்லனை புகைப்படம் எடுத்துக் கொண்டாள். அது அவனுக்கு வியப்பை அளித்தது. அது மட்டுமல்லாது அவனுடைய எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
"தென்றல், நீ மதுரைக்கு போனதுக்கு பிறகு தான் எனக்கு ஃபோன் பண்ண சொன்னேன்..."
அந்த அழைப்பை துண்டித்து விட்டு,
"இப்போ நீங்க எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றாள்.
"எதுக்கு?"
"சொன்னதை செய்யுங்களேன்"
அவளுடைய எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். அந்த அழைப்பை ஏற்று பேசினாள் இளந்தென்றல்.
"என்னோட ஃபோனுக்கு வர்ற முதல் கால் உங்களுடையதா இருக்கணும்னு நினைச்சேன்"
"கிரேசி சென்டிமென்ட்" என்று சிரித்தபடி லேசாய் தலையசைத்த மாமல்லன்,
"ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?" என்றான்.
"நான் நல்லா தான் இருக்கேன் "
"அப்படியா? உன் முகத்தைப் பத்தி எனக்கு தெரியாதா? கண்ணாடியில் பாரு, நீ எவ்வளவு சோகமா இருக்கேன்னு..."
"உங்களைப் பார்க்காம எப்படி இருக்க போறேன்னு தெரியல. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"
இப்படி எல்லாம் பேசுவது இளந்தென்றலா? மலைத்துப் போனான் மாமல்லன். திருமணம் என்னும் பந்தம் தான், இது குறுகிய காலகட்டத்தில், ஒரு பெண்ணை எவ்வளவு தலைகீழாய் மாற்றி விடுகிறது...! இது தான் திருமண பந்தத்தின் மகத்துவம்...!
"நீங்க எப்போ மதுரைக்கு வருவீங்க?"
"ரொம்ப சீக்கிரம்"
"நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்"
"நானும் உன்னை ரொம்ப காக்க வைக்க மாட்டேன்"
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...
39 காத்திருந்த அதிர்ச்சி
Start from the beginning