32 நண்பன் யார்?

Start from the beginning
                                    

எம் கே அலுவலகம்

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, வானமே உடைந்து விட்டதோ என்றென்றும் அளவிற்கு, பெருமழையை சந்தித்துக் கொண்டிருந்தது சென்னை மாநகரம். பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைக்காடாய் காட்சியளித்தது. வாகனங்கள் மழை வெள்ளத்தில் நீந்தி சென்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாய் ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் வாகனங்களுடன், சாலைகளில், மழை நீருடன் தேங்கி நின்றார்கள். இந்த பெரு மழையைத் தொடர்ந்து, புயலுக்கு வாய்ப்பிருப்பதாய் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தன் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக, கொட்டும் மழையை, வறண்ட இதயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான் மாமல்லன். அவன் அலுவலகம் வந்ததிலிருந்தே அவனது முகத்தில் தெரிந்த பதற்றத்தை கவனித்தான் பரஞ்ஜோதி. அவனது அறைக்கு வந்த பரஞ்ஜோதி, அவனுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சு மல்லா? எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்க?"

"அப்புறம் சொல்றேன். முதல்ல லேடி ஸ்டாஃப் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பு. இந்த மழை இப்போ விடுற மாதிரி தெரியல. டிராஃபிக் வேற ஒர்ஸ்ட் ஆயிக்கிட்டே போகுது. அவங்க வீட்டுக்கு போறதுல பிரச்சனை ஆக போகுது..." என்று தும்மினான்.

"உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே?"

"இல்லன்னு சொல்றதுக்கு இல்ல...  தலை, வெடிக்கிற மாதிரி வலிக்குது... ஃபீவர் வேற இருக்கு..."

"அப்புறம் இந்த மோசமான கிளைமேட்ல எதுக்காக நீ ஆஃபீசுக்கு வந்த?"

அவனுக்கு பதில் கூறாமல் மீண்டும் தும்மினான் மாமல்லன்.

"மாத்திரை ஏதாவது போடுறியா?"

"நிச்சயமா போடணும்... என்னால முடியல"

"முதல்ல காலையில ஏதாவது சாப்பிட்டியா, இல்லையான்னு சொல்லு"

"இல்ல"

"ஏன் சாப்பிடாம வந்த? இளந்தென்றலுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now