26 உனக்கு என்ன ஆனது?

Start from the beginning
                                    

"தென்றல், உனக்கு என்ன ஆச்சு மா? ஏன் இப்படி இருக்க?" என்றான் பொறுமை இழந்து.

"நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் பலவீனமான குரலில்.

அதைக் கேட்டு பல்லை கடித்தான் மாமல்லன்.

"நீ எப்படி இருக்கேன்னு பாரு... நல்லா இருக்கேன்னு வேற சொல்றியா நீ...? உன்னை இப்படி பார்க்க எனக்கு பயமாயிருக்கு, தென்றல்..."

"இதெல்லாம் காமனா நடக்குறது தான்... ப்ளீஸ், என்னை தனியா இருக்க விடுங்க" என்ற அவளது குரல் மெல்லியதாய் ஒலித்தது.

"காமனா? அப்படின்னா ஏன் இதுக்கு நீ ட்ரீட்மென்ட் எடுத்துக்கல? எதுக்காக இந்த வலியில இப்படி கஷ்டப்பட்டுகிட்டு இருக்க?"

"ப்ளீஸ், என்னை தூங்க விடுங்க..."

"விடுறேன்... ஆனா அதுக்கு முன்னாடி, நீ என் கூட ஹாஸ்பிடல் வர..."

"தேவையில்ல"

"இங்க பாரு... தேவையில்லாம, என் ஆத்திரத்தை கிளப்பாதே... நான் ஏற்கனவே உன்னை இப்படி பார்த்து செம கடுப்புல இருக்கேன்..." என்றான் கோபமாய்.

அவள் இருக்கும் நிலையில், அவனுடன் விவாதம் செய்து கொண்டிருக்கும் திராணி அவளுக்கு இருக்க வில்லை. எழுந்து நிற்க முயன்றாள் இளந்தென்றல். ஆனால், அவளால் நிற்கக்கூட முடியவில்லை... வாடிய கொடி போல் துவண்டு விழுந்தாள்.

அவளுக்கு என்ன தான் நேர்ந்து விட்டது என்று புரியாத மாமல்லன், பரிதவித்து போனான். தங்களுக்கு இடையில் இருந்த அனைத்து வித்தியாசங்களையும் மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட்டு, அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு நடந்தான் மாமல்லன். திகைத்துப் போனாள் இளந்தென்றல். வேற்று ஆணின் கையில் இருப்பதைப் போன்ற சங்கடம் வேறு எதுவும் இல்லை. இதற்கு முன்பு கூட, அவன் அவளை ஒருமுறை தூக்கிச்சென்றான் தான். ஆனால் அப்போது, அவள் மயக்க நிலையில் இருந்தாள். ஆனால் இப்போது, அவனது முகபாவத்தை அவளால் நன்றாக பார்க்க முடிகிறது.

ஆனால், மாமல்லனின் நிலையோ, முற்றிலும் வேறாய் இருந்தது. அவனது கவனம் வேறு எதிலும் செல்லவில்லை... வேறு எதிலும் கவனத்தை செலுத்தும் நிலையில் அவன் இல்லை. இப்போதைக்கு, அவனுக்கு தேவை எல்லாம், அவளை அந்த கொடுமைக்கார வலியிலிருந்து வெளியே கொண்டு வருவது மட்டும் தான்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now