19 அவள் வருவாள்

Start from the beginning
                                    

காதம்பரி கூறியதைப் போலவே, அவர் ஒன்றும் கூறாமலேயே, இளந்தென்றலை பார்த்த பொழுது, தன் மனதில் வித்தியாசத்தை உணர்ந்தான் மாமல்லன். அவளுக்கும் தன் அம்மாவிற்கும் ஏதோ ஒரு ஒற்றுமையை இருப்பதாய் உணர்ந்தான் அவன். அந்த எண்ணம் அவனை தன் நிலையில் உறுதியாய் நிற்க செய்தது. அப்படித்தான் இளந்தென்றலும்... பாவம் அவள்... தன் கண் முன்னால் இருக்கும் ஒருவனை, எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறாள். விதி அவர்களை எப்படித் தான் இணைக்கிறது என்று பார்ப்போமே...!}

மறுநாள் காலை,

காலை சிற்றுண்டிக்காக தரைதளம் வந்த மாமல்லன், இளந்தென்றல் எதையோ தீவிரமா யோசித்துக் கொண்டிருப்பதை கண்டான். அவன் வந்தது கூட தெரியாமல், அவள், அவன் மீது மோதி கொண்டாள். அவளது கன்னத்தில் இருந்த ஈரம் அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவன் முன் நிற்காமல், அங்கிருந்து விரைந்து சென்றாள் இளந்தென்றல். அதனால் மாமல்லன் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.

அவனால் தானே, இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவளால் தனது அம்மாவுடன் இருக்க முடியாமல் போய்விட்டது...? அவளது அழுது சிவந்த கண்கள் அவனது நிம்மதியை குலைத்தது. அவனால் என்ன செய்ய முடியும்? அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி யோசித்தான். அவன் மனதில் ஒரு உபாயம் தோன்றியதால், கண்களை திறந்தான்.  ஒருவேளை, அவன் மனதில் தோன்றிய உபாயம், அவனுக்கே வினையாய் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று தோன்றியது அவனுக்கு.

பரஞ்சோதிக்கு ஃபோன் செய்து, தனது எண்ணத்தை அவனிடம் கூறினான். அதைக் கேட்ட பரஞ்சோதி, வாயடைத்து போனான். அவன் கூறிய விஷயத்தில் சிறிது கூட உடன்பாடு இல்லை பரஞ்சோதிக்கு. ஆனால் மாமல்லன் எதையும் கேட்க தயாராய் இல்லை. இறுதியில், தான் கூறியதை செய்யுமாறு பரஞ்ஜோதிக்கு கட்டளையிட்டான்.

இளந்தென்றலின் அறைக்கு வந்த மாமல்லன், அவளது அறையின் கதவை தட்டினான், அது திறந்தே இருந்த போதிலும். அவனைப் பார்த்த இளந்தென்றல் வெளியே வந்தாள்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now