பாகம் 25
ஸ்ருதிக்கு வயிற்றைக் கலக்கியது, அஸ்வினை பார்த்த போது. கடவுளே... இவர் எங்கிருந்து வந்தார்?
அவள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட அஸ்வின், முதலில் எதுவும் புரியாமல் குழம்பினான். எதற்காக இவள் இப்படி புளுகி கொண்டிருக்கிறாள்? அவன் தன் கண்களை ஓட விட்டான். மரத்தின் பின்னால் இருந்த தருணின் நிழல், அவன் கண்ணில் பட்டது.
"ஓ... மேடம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா...?"
அவன் தொண்டையில் இருந்து வெளிவரத் துடித்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் இது... இப்பொழுது அவள் அருகில் இவன் சென்றால் அவள் என்ன செய்வாள்? அவளால் நிச்சயம் தப்பி ஓட முடியாது. ஏனென்றால் அங்கு தான் தருண் இருக்கிறானே... அவன் முன், இவள் அமைதியாக இருந்து தானே ஆகவேண்டும்...?
அஸ்வின் அவளை நோக்கி முன்னேற தொடங்கிய பொழுது, அவள் கண்கள் அகல விரிந்தன. அவள் பின்னோக்கி நகரும் முன், வேக நடை போட்டு சென்று, அவள் இடையை சுற்றி வளைத்து, அவளைத் தடுமாற வைத்தான் அஸ்வின்.
தருண் நின்றிருந்த மரத்தின் பக்கம் தன் கண்களை திருப்பினாள் ஸ்ருதி. அந்த கடங்காரன் இன்னும் அங்கே தான் நின்றிருந்தான். ஏதும் செய்ய முடியாமல் மென்று விழுங்கினாள் அவள்.
"பொண்ணுங்க *பிபிசி* யை விட வேகமா, எல்லா செய்தியையும் பரப்புவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அப்போ நான் அத நம்பல... ஆனா இப்ப நம்புறேன். *அந்த மாதிரி* விஷயத்தை எல்லாம் கூடவா எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணுவ? அந்த ஒன்ன தவிர மற்ற விஷயத்தை பத்தி நீ அவங்ககிட்ட பெருமையா பேசிக்கலாம். முக்கியமா நேத்து ராத்திரி நமக்குள்ள நடந்ததை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாத. உன்னோட ஃப்ரண்ட்ஸுங்க, உன்னை பார்த்து பொறாமை பட போறாங்க... இவ்வளவு திறமையான புருஷனான்னு... அந்த ஸ்பெஷல் மூமென்ட்ஸ் எல்லாம் நமக்குள்ளேயே வச்சுக்கோ. சும்மா சொல்லக் கூடாது... நீ எல்லா விஷயத்துலயும் ரொம்ப போல்ட்... கத்தியால குத்துவதா இருக்கட்டும்... உன் புருஷனை காதலிப்பதா இருக்கட்டும்... நீ ரொம்ப போல்ட்..."
YOU ARE READING
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
RomanceThis is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.