Part 3

2.1K 84 0
                                    

பாகம் 3

அஸ்வினின் மாறாத புன்னகை பார்த்து. மனோஜும், அருணும் அதிசயித்துப் போனார்கள். அன்று ஸ்ருதியை பார்த்துவிட்டு வந்த பிறகு, அஸ்வினால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை. அவளால் பொருத்தப்பட்ட, பேட்ஜை பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

அருணால் எதையும் நிச்சயமாக யூகிக்க முடியவில்லை.

ஆனால் மனோவோ, அவனுடைய மனோநிலையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைத்தான். அந்தப் பெண்ணை அவனுக்கு பிடித்துவிட்டதா என்ன? ஆனால் எப்படி? அவன் அந்த பெண்ணை இரண்டு முறை தானே பார்த்திருக்கிறான்... அதுவும் சொற்ப வினாடிகளே... ஆனால் அந்த சொற்ப வினாடிகள் முழுவதும், அவனுடைய பார்வை, அந்த பெண்ணின் மீது தான் வேர்விட்டு பதிந்திருந்தது. அது, அவன் எந்தப் பெண்ணையும் பார்த்து, இதுவரை செய்திராத ஒன்று. அது மட்டும் அல்லாமல், அந்த பெண்ணிடம் பணம் கொடுத்த பொழுது, அவன் புன்னகை புரிந்தான்... இன்னும் அந்த பெண் பொருத்திய பேட்ஜை அணிந்திருக்கிறான்... அந்த பெண்ணுக்கு நன்கொடை அளித்தது வேண்டுமானால், அஸ்வினை பொருத்தவரை சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், அந்த பெண்ணின் அடையாள அட்டையில் இருந்து, அவளுடைய பெயரை தெரிந்துகொள்ள துடித்தது அஸ்வின் செய்யும் காரியம் அல்ல. அது, அஸ்வினை தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

அருண், மனோஜை, தரதரவென தனது அறைக்கு இழுத்து வந்தான். அந்த நேரம், அவர்களுக்கு மதிய உணவை அளிக்க வந்த தருண், அந்த காட்சியைக் கண்டான். அவர்கள் இருவருக்குள்ளும், ஏதோ நடக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவனுக்கு ஆவல் மிகுந்தது. தருணை பொருத்தவரை, இந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான இருவர் என்றால், அது மனோஜும், அருணும் தான். அஸ்வினுடைய வல, இட கரங்கள். அஸ்வினுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். அவன் மெல்ல அருணின் அறையின் அருகே  வந்து, அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கலானான்.

"என்னடா விஷயம்?" என்றான் மனோஜ்.

"அதையே தான் நானும் கேக்குறேன்... என்ன விஷயம்?"என்று பதில் கேள்வி கேட்டான் அருண்.

போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )Where stories live. Discover now