பாகம் 15
திருமண நாள்... 10:30 - 12:00 முகுர்த்தம்...
அஸ்வினின் அறைக்கு வந்து, அவனுக்கு பட்டு வேட்டி சட்டை கொடுத்தார் சுபத்ரா. அதைப் பார்த்து பெருமூச்சு விட்டான் அஸ்வின்.
"இந்த டிரஸ் எனக்கு கம்ஃபர்டபுலாவே இருக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா? எனக்கு கோட் சூட்டே போதும்." என்றான்.
"இது நம்ம குடும்ப கல்யாணம். எல்லாருடைய கண்ணும் நம்ம மேல தான் இருக்கும். மாப்பிள்ளையோட அண்ணன் நீ. அதுக்காகவாவது இதைப் கட்டிக்க."
சுபத்ராவின் கையிலிருந்து, அதை வேண்டா வெறுப்பாக பெற்றுக்கொண்டான் அஸ்வின். அங்கிருந்து திருப்தியுடன் புன்னகைத்து விட்டு சென்றார் சுபத்ரா.
....தாங்க முடியாத கோபத்துடன் தருணின் அறைக்குள் நுழைந்தான் அருண்.
"உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?" என்று எரிந்து விழுந்தான்.
"நீ எதைப் பத்தி பேசறே?" என்றான் தருண்.
"உன்னோட எக்ஸ்-கேர்ள்ஃப்ரெண்ட் இங்க என்ன பண்ணிகிட்டிருக்கா?" என்றான் காட்டமாக.
"யாரு?"
"அதானே... உனக்கு ஒரே ஒரு *எக்ஸ்* இருந்திருந்தா, சொன்ன உடனே ஞாபகம் வரும். நானும் முட்டாள் மாதிரி, உனக்கு ஒரே ஒரு *எக்ஸ்* இருந்தா மாதிரி பேசிட்டு இருக்கேன் பாரு..." என்று கோபமும் எகத்தாளமும் கலந்து பேசினான்.
அவன் கையை பிடித்து, தரதரவென ஜன்னல் பக்கம் இழுத்துச் சென்றான் அருண்.
"அங்கே பாரு..."
அங்கு நின்றிருந்த பெண்ணை பார்த்தவுடன், தருணின் முகம், கள் குடித்த குரங்கைப் போல் மாறியது. அவன் தனது உணர்வுகளை கட்டுபடுத்த படாத பாடுபட்டான்.
"இன்னிக்கு உனக்கு கல்யாணம். இன்னும் உனக்கு இந்த கண்றாவி எல்லாம் தேவையா?" என்று கத்தினான் அருண்.
"சத்தியமா நான் அவளை கூப்பிடல. அவ இங்க எப்படி வந்தான்னு எனக்கு தெரியல. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்..."
YOU ARE READING
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
RomanceThis is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.