பாகம்-4
அருண் ஏன் பரிதவிப்போடு இருக்கிறான் என்பதை, மனோஜால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. காலையிலிருந்து அவன் மனோஜிடம் பேசக் கூட இல்லை. அவனுக்கு என்ன ஆயிற்று? எது அவனை படபடப்புடன் வைத்திருக்கிறது? அருணின் கேபினுக்கு சென்ற மனோஜ், கதவை தட்டாமல் உள்ளே நுழைந்தான். அருண், கண்ணை மூடிக்கொண்டு, தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டு இருப்பதை பார்த்தான்.
"அருண்..."
மனோஜின் வருகையை கவனிக்காத அவன், சட்டென்று எழுந்தான்.
"என்ன ஆச்சு உனக்கு? நான் வந்ததை கூட நீ கவனிக்கல... எது உன்னை கஷ்டப்படுத்திகிட்டு இருக்கு?"
"வேற என்ன? தருண் தான்." என்றான் சலிப்புடன்.
"அவன் என்ன செஞ்சான்?"
"இதுவரைக்கும் எதுவும் செய்யல. ஆனா, அவன் ஏதோ செய்யப் போறதா மனசுக்கு படுது."
"ஏன் அப்படி நினைக்கிற?"
"என்னால எதையும் சரியா சொல்ல முடியல. ஆனா, ஏதோ தப்பா நடக்க போறதை மட்டும், மனசு உறுத்திக்கிட்டே இருக்கு..."
"திடீர்னு உனக்கு அப்படி தோன காரணம்?"
"அவன், அவனோட ஃபிரண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன். ஏதோ ஒரு பொண்ணை பார்ட்டிக்கு அழைச்சுக்கிட்டு வர்றதுக்கு, அவனை கட்டாயப்படுத்திக்கிட்டு இருந்தான்."
"இது வழக்கமா அவன் செய்றது தானே?"
"நான் அது பத்தி கேட்டப்போ பேச்சை மாத்திட்டான், அலுமினி ஃபங்ஷன்னு... இவனெல்லாம் அலுமினி பங்க்ஷன் பத்தி யோசிக்கிறவனா?"
"ஏன் மாட்டான்? ஒருவேளை, அங்க அழகான பொண்ணுங்க வந்தா அவன் போவான் தானே?" என்றான் கிண்டலாக.
"இல்ல மனோ... நான் அப்படி நினைக்கல. அவன் ஏதோ பிளான் பண்றான். அவன் கண்ணன் கிட்ட ரொம்ப சூடா பேசினான்"
"இப்ப அவன் எங்க?"
"தெரியல"
"நம்ம அவனுடைய உடம்புல ஒரு டிராக்கிங் டிவைஸை செட் பண்ணனும் போல இருக்கு." என்றான் வேடிக்கையாக மனோஜ்.
YOU ARE READING
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
RomanceThis is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.