மறக்காதே நீ மறுக்காதே நீ - 30
சித்தார்த்தை உதடுகள் ஏளனமாக வளைய பார்த்தபடி சேரில் கால் மேல் கால் போட்டு அலட்சியமாக அமர்ந்தாள் சம்யுக்தா.அவளை வெறுப்பாக பார்த்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்தவனை சம்யுக்தாவின் குரல் நிறுத்தியது
"மிஸ்டர் சித்தார்த், உங்களை என்னவோ நினைச்சேன் இவ்வளவு தானா?" என தோளை குலுக்கினாள்.
ஒரு நொடி நின்று அவளை திரும்பி முறைத்துப் பார்த்தான் சித்தார்த்.
"உங்களை தொட கூட முடியாதுனு சொன்னாங்க, ஆனா ஜஸ்ட் லைக் தட்" என கையை சொடுக்கியவள், "ஈஸியா தூக்கிட்டோம்" என முகத்தில் ஏளனம் தெரிய சிரித்தாள்.
"கங்கிராட்ஸ்" என வெறுப்பாக கைகளை சேர்த்து தட்டி விட்டு கதவை நோக்கி ஒரடி எடுத்து வைத்தான்.
"தி கிரேட் சித்தார்த்" என எழுந்தவள், "உங்களை பார்க்கவே எனக்கு பாவமாயிருக்கு" என இடுப்பில் கையை வைத்தபடி நின்றாள்.
"உன்னை யார் என்னை பார்க்க சொன்னா?" என இன்னும் இரண்டடி எடுத்து வைத்தான்.
"நீங்க பெரிய தைரியசாலினு நினைச்சேன். ஒரு பிரச்சனையை நின்னு தைரியமா எதிர் கொள்ள தெரியாமா ஒடி போறதிலேயே இருக்கீங்க" என அலட்சியமாக சொன்னாள்.
"நீ என்ன நினைச்சாலும், ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்" என அழுத்தமாக அவளைப் பார்த்து சொன்னான் சித்தார்த்.
"ஒ, அப்போ எதுக்கு இந்த இருபது நாள் குட் மார்னிங், குட் நைட் மெசெஜ் எனக்கு அனுப்பிச்சி டார்ச்சர் செஞ்சீங்க" என கேட்டாள் சம்யுக்தா.
"தப்பான ஆளுக்கு அந்த மெசெஜை அனுப்பிச்சிட்டேன். உன்னை டார்ச்சர் செஞ்சதற்கு ஸாரி" என அவளது முகத்தைப் பார்த்து உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
"அதுக்கு மட்டும் தான் ஸாரியா? நீங்க செஞ்ச மத்த தப்புக்கெல்லாம் ஸாரி கேட்க மாட்டிங்களா?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.
"என்னடா சாமி இன்னும் மலை ஏறலையேனு நினைச்சேன், வரிசையா நான் செஞ்ச தப்பை எல்லாம் சொல்லு. நான் எல்லாத்துக்கும் ஒரேடியா உங்கிட்ட மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பறேன்" என எரிச்சலாக சொன்னான்.
YOU ARE READING
Completed - Marukkathe Nee Marakaathe Nee
RomanceSudum Nilavu Sudatha Suriyan - Part 2